Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௭௦

Qur'an Surah Hud Verse 70

ஸூரத்து ஹூது [௧௧]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا رَاٰىٓ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ۗقَالُوْا لَا تَخَفْ اِنَّآ اُرْسِلْنَآ اِلٰى قَوْمِ لُوْطٍۗ (هود : ١١)

falammā raā
فَلَمَّا رَءَآ
But when he saw
அவர் பார்த்தபோது
aydiyahum
أَيْدِيَهُمْ
their hands
அவர்களுடைய கரங்களை
lā taṣilu
لَا تَصِلُ
not reaching
சேராது
ilayhi
إِلَيْهِ
to it
அதன் பக்கம்
nakirahum
نَكِرَهُمْ
he felt unfamiliar of them
சந்தேகித்தார் அவர்களைப் பற்றி
wa-awjasa
وَأَوْجَسَ
and felt apprehension
இன்னும் அவர் மறைத்தார்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களைப் பற்றி
khīfatan
خِيفَةًۚ
[a fear]
பயத்தை
qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
lā takhaf
لَا تَخَفْ
"(Do) not fear
பயப்படாதீர்
innā
إِنَّآ
Indeed we
நிச்சயமாக நாங்கள்
ur'sil'nā
أُرْسِلْنَآ
[we] have been sent
அனுப்பப்பட்டோம்
ilā qawmi
إِلَىٰ قَوْمِ
to (the) people
மக்களின் பக்கம்
lūṭin
لُوطٍ
(of) Lut"
லூத்துடைய

Transliteration:

Falammaa ra aaa aidiyahum laa tasilu ilaihi nakirahum wa awjasa minhum kheefah; qaaloo la takhaf innaaa ursilnaaa ilaa qawmi Loot (QS. Hūd:70)

English Sahih International:

But when he saw their hands not reaching for it, he distrusted them and felt from them apprehension. They said, "Fear not. We have been sent to the people of Lot." (QS. Hud, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய கைகள் அதனிடம் செல்லாததைக் கண்டதும் அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயமும் அவர் மனதில் ஊசலாடியது. (அப்பொழுது) அவர்கள் (இப்ராஹீமை நோக்கி) "நீங்கள் பயப்படாதீர்கள். நிச்சயமாக நாங்கள் "லூத்"துடைய மக்களிடம் (அவர்களை அழித்துவிட) அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். (ஸூரத்து ஹூது, வசனம் ௭௦)

Jan Trust Foundation

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுடைய கைகள் அதன் பக்கம் சேராததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். அவர்கள் (இப்றாஹீமே) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டோம்”என்று கூறினார்கள்.