Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩

Qur'an Surah Yunus Verse 3

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْاَمْرَۗ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖۗ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُۗ اَفَلَا تَذَكَّرُوْنَ (يونس : ١٠)

inna rabbakumu
إِنَّ رَبَّكُمُ
Indeed your Lord
நிச்சயமாகஉங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
the One Who
எத்தகையவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
the heavens
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
and the earth
இன்னும் பூமியையும்
fī sittati
فِى سِتَّةِ
in six
இல்/ஆறு
ayyāmin
أَيَّامٍ
periods
நாள்கள்
thumma
ثُمَّ
then
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
He established
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
on
மீது
l-ʿarshi
ٱلْعَرْشِۖ
the Throne
அர்ஷ்
yudabbiru
يُدَبِّرُ
disposing
நிர்வகிக்கிறான்
l-amra
ٱلْأَمْرَۖ
the affairs
காரியத்தை
mā min
مَا مِن
Not (is) any intercessor
அறவே இல்லை
shafīʿin
شَفِيعٍ
(is) any intercessor
பரிந்துரைப்பவர்
illā
إِلَّا
except
தவிர
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னரே
idh'nihi
إِذْنِهِۦۚ
His permission
அவனுடைய அனுமதிக்கு
dhālikumu
ذَٰلِكُمُ
That
அந்த
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்தான்
rabbukum
رَبُّكُمْ
your Lord
உங்கள் இறைவன்
fa-uʿ'budūhu
فَٱعْبُدُوهُۚ
so worship Him
ஆகவே வணங்குங்கள் அவனை
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
Then will not you remember?
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Transliteration:

Inna Rabbakumul laahul lazee khalaqas samaawaati wal arda fee sittati aiyaamin summas tawaa 'alal 'Arshi yudabbirul amra maa min shafee'in illaa mim ba'di iznih; zalikumul laahu Rabbukum fa'budooh; afalaa tazakkaroon (QS. al-Yūnus:3)

English Sahih International:

Indeed, your Lord is Allah, who created the heavens and the earth in six days and then established Himself above the Throne, arranging the matter [of His creation]. There is no intercessor except after His permission. That is Allah, your Lord, so worship Him. Then will you not remember? (QS. Yunus, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து "அர்ஷின்" மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகின்றான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர்களும் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்ப்பவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவைகளை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். காரியத்தை (அவனே) நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் அறவே (எவரும்) இல்லை. அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?