Skip to content

ஸூரா ஸூரத்துல் பய்யினா - Word by Word

Al-Bayyinah

(al-Bayyinah)

bismillaahirrahmaanirrahiim

لَمْ يَكُنِ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ مُنْفَكِّيْنَ حَتّٰى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُۙ ١

lam yakuni
لَمْ يَكُنِ
இருக்கவில்லை
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களாகிய
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
இன்னும் இணைவைப்போர்
munfakkīna
مُنفَكِّينَ
விலகியவர்களாக
ḥattā
حَتَّىٰ
வரை
tatiyahumu
تَأْتِيَهُمُ
தங்களிடம் வருகின்ற
l-bayinatu
ٱلْبَيِّنَةُ
தெளிவான அத்தாட்சி
இதனை நிராகரிக்கும் வேதத்தையுடையவர்களிலும், இணை வைத்து வணங்குபவர்களிலும் பலர், தங்களிடம் தெளிவான அத்தாட்சி வரும் வரையில் (யாதொரு தெளிவான அத்தாட்சி வந்தால், இதனைப் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இருந்து) விலகாது (உறுதியாகவே) இருந்தனர். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௧)
Tafseer

رَسُوْلٌ مِّنَ اللّٰهِ يَتْلُوْا صُحُفًا مُّطَهَّرَةًۙ ٢

rasūlun
رَسُولٌ
தூதர்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
yatlū
يَتْلُوا۟
ஓதுகின்றார்
ṣuḥufan
صُحُفًا
ஏடுகளை
muṭahharatan
مُّطَهَّرَةً
பரிசுத்தமான
(அவர்களிடம் வந்திருக்கும் தெளிவான அத்தாட்சி என்னவென்றால், அவர்களுக்குப்) பரிசுத்தமான வேதங்களை ஓதிக் காண்பிக்கக்கூடிய அல்லாஹ்வினுடைய (இந்தத்) தூதர்தான். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௨)
Tafseer

فِيْهَا كُتُبٌ قَيِّمَةٌ ۗ ٣

fīhā
فِيهَا
அவற்றில்
kutubun
كُتُبٌ
சட்டங்கள்
qayyimatun
قَيِّمَةٌ
நேரான
(அவர் ஓதிக் காண்பிக்கும்) அதில் நிலையான சட்ட திட்டங்களே வரையப்பட்டிருக்கின்றன. ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௩)
Tafseer

وَمَا تَفَرَّقَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَاۤءَتْهُمُ الْبَيِّنَةُ ۗ ٤

wamā tafarraqa
وَمَا تَفَرَّقَ
பிரியவில்லை
alladhīna ūtū
ٱلَّذِينَ أُوتُوا۟
கொடுக்கப்பட்டவர்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதம்
illā
إِلَّا
தவிர
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
mā jāathumu
مَا جَآءَتْهُمُ
தங்களிடம் வந்தது
l-bayinatu
ٱلْبَيِّنَةُ
தெளிவான சான்று
(அவர்களின் வரவை எதிர்பார்த்து, அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டிருந்த) வேதத்தையுடையவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி(யாகிய நமது தூதர்) வந்ததன் பின்னர் (அவருக்கு) மாறுசெய்து பிளவுபட்டு விட்டனர். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௪)
Tafseer

وَمَآ اُمِرُوْٓا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۙ حُنَفَاۤءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِۗ ٥

wamā umirū
وَمَآ أُمِرُوٓا۟
அவர்கள் ஏவப்படவில்லை
illā liyaʿbudū
إِلَّا لِيَعْبُدُوا۟
தவிர/வணங்குவதற்கு
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
வழிபாட்டை
ḥunafāa
حُنَفَآءَ
இணைவைப்பை விட்டு விலகியவர்களாக
wayuqīmū
وَيُقِيمُوا۟
இன்னும் அவர்கள் நிலைநிறுத்துவது
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wayu'tū
وَيُؤْتُوا۟
இன்னும் அவர்கள் கொடுப்பது
l-zakata
ٱلزَّكَوٰةَۚ
ஸகாத்தை
wadhālika
وَذَٰلِكَ
இன்னும் இதுதான்
dīnu
دِينُ
மார்க்கம்
l-qayimati
ٱلْقَيِّمَةِ
நேரான
(எனினும், அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே அன்றி, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௫)
Tafseer

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِيْنَ فِيْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۗ اُولٰۤىِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِۗ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்கள்
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களாகிய
wal-mush'rikīna
وَٱلْمُشْرِكِينَ
இன்னும் இணைவைப்போர்
fī nāri
فِى نَارِ
நெருப்பில்
jahannama
جَهَنَّمَ
நரகம்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَآۚ
அதில்
ulāika hum
أُو۟لَٰٓئِكَ هُمْ
இவர்கள்தான்
sharru
شَرُّ
மகா தீயோர்
l-bariyati
ٱلْبَرِيَّةِ
படைப்புகளில்
ஆகவே, வேதத்தையுடையவர்களிலும், இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்த வர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக நரகத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௬)
Tafseer

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ اُولٰۤىِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِۗ ٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்களை
ulāika hum
أُو۟لَٰٓئِكَ هُمْ
அவர்கள்தான்
khayru
خَيْرُ
மிகச் சிறந்தோர்
l-bariyati
ٱلْبَرِيَّةِ
படைப்புகளில்
ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின் றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௭)
Tafseer

جَزَاۤؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًا ۗرَضِيَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ۗ ذٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهٗ ࣖ ٨

jazāuhum
جَزَآؤُهُمْ
அவர்களுடைய கூலி
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
jannātu
جَنَّٰتُ
சொர்க்கங்கள்
ʿadnin
عَدْنٍ
அத்ன்
tajrī
تَجْرِى
ஓடுகின்றன
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழே
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
fīhā
فِيهَآ
அவற்றில்
abadan
أَبَدًاۖ
எப்போதும்
raḍiya
رَّضِىَ
திருப்தி அடைவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿanhum
عَنْهُمْ
அவர்களைப் பற்றி
waraḍū
وَرَضُوا۟
இன்னும் அவர்கள் திருப்தி அடைவார்கள்
ʿanhu
عَنْهُۚ
அவனைப் பற்றி
dhālika
ذَٰلِكَ
இது
liman khashiya
لِمَنْ خَشِىَ
பயந்தவருக்கு
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனை
அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள "அத்ன்" என்னும் நிலையான சுவனபதியாகும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தன் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். ([௯௮] ஸூரத்துல் பய்யினா: ௮)
Tafseer