Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௭௪

Qur'an Surah At-Tawbah Verse 74

ஸூரத்துத் தவ்பா [௯]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَحْلِفُوْنَ بِاللّٰهِ مَا قَالُوْا ۗوَلَقَدْ قَالُوْا كَلِمَةَ الْكُفْرِ وَكَفَرُوْا بَعْدَ اِسْلَامِهِمْ وَهَمُّوْا بِمَا لَمْ يَنَالُوْاۚ وَمَا نَقَمُوْٓا اِلَّآ اَنْ اَغْنٰىهُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ مِنْ فَضْلِهٖ ۚفَاِنْ يَّتُوْبُوْا يَكُ خَيْرًا لَّهُمْ ۚوَاِنْ يَّتَوَلَّوْا يُعَذِّبْهُمُ اللّٰهُ عَذَابًا اَلِيْمًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ ۚوَمَا لَهُمْ فِى الْاَرْضِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ (التوبة : ٩)

yaḥlifūna
يَحْلِفُونَ
They swear
சத்தியமிடுகின்றனர்
bil-lahi
بِٱللَّهِ
by Allah
அல்லாஹ் மீது
mā qālū
مَا قَالُوا۟
(that) they said nothing (that) they said nothing
அவர்கள் கூறவில்லை
walaqad qālū
وَلَقَدْ قَالُوا۟
while certainly they said
கூறியிருக்கின்றனர்
kalimata
كَلِمَةَ
(the) word
வார்த்தை
l-kuf'ri
ٱلْكُفْرِ
(of) the disbelief
நிராகரிப்பின்
wakafarū
وَكَفَرُوا۟
and disbelieved
இன்னும் நிராகரித்தனர்
baʿda
بَعْدَ
after
பின்னர்
is'lāmihim
إِسْلَٰمِهِمْ
their (pretense of) Islam
அவர்கள் முஸ்லிமானதற்கு
wahammū
وَهَمُّوا۟
and planned
இன்னும் திட்டமிட்டனர்
bimā
بِمَا
[of] what
எதற்கு
lam yanālū
لَمْ يَنَالُوا۟ۚ
not they could attain
அவர்கள் அடையவில்லை
wamā naqamū
وَمَا نَقَمُوٓا۟
And not they were resentful
அவர்கள் தண்டிக்கவில்லை
illā
إِلَّآ
except
தவிர
an aghnāhumu
أَنْ أَغْنَىٰهُمُ
that Allah had enriched them
என்பதற்காக/நிறைவாக்கினான்/இவர்களுக்கு
l-lahu
ٱللَّهُ
Allah had enriched them
அல்லாஹ்
warasūluhu
وَرَسُولُهُۥ
and His Messenger
இன்னும் அவனுடைய தூதர்
min faḍlihi
مِن فَضْلِهِۦۚ
of His Bounty
தன் அருளினால்
fa-in yatūbū
فَإِن يَتُوبُوا۟
So if they repent
அவர்கள் திருந்தினால்
yaku
يَكُ
it is
இருக்கும்
khayran
خَيْرًا
better
சிறந்ததாக
lahum
لَّهُمْۖ
for them
அவர்களுக்கே
wa-in yatawallaw
وَإِن يَتَوَلَّوْا۟
and if they turn away
அவர்கள் விலகிச்சென்றால்
yuʿadhib'humu
يُعَذِّبْهُمُ
Allah will punish them
வேதனை செய்வான்/அவர்களை
l-lahu
ٱللَّهُ
Allah will punish them
அல்லாஹ்
ʿadhāban
عَذَابًا
(with) a punishment
வேதனையால்
alīman
أَلِيمًا
painful
துன்புறுத்தக்கூடிய
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
in the world
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۚ
and (in) the Hereafter
இன்னும் மறுமையில்
wamā lahum
وَمَا لَهُمْ
And not for them
அவர்களுக்கு இல்லை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
min waliyyin
مِن وَلِىٍّ
[of] any protector
ஒரு பாதுகாவலர்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
and not any helper
ஓர் உதவியாளர்

Transliteration:

Yahlifoona billaahi wa qaaloo wa laqad qaaloo kalimatal kufri wa kafaroo ba'da Islaamihim wa hammoo bimaa lam yanaaloo; wa maa naqamooo illaaa an aghnaa humullaahu wa Rasooluhoo min fadlih; fainy yatooboo yaku khairal lahum wa iny yatawal law yu'az zibhumullaahu 'azaaban aleeman fiddunyaa wal Aakhirah; wamaa lahum fil ardi minw waliyyinw wa laa naseer (QS. at-Tawbah:74)

English Sahih International:

They swear by Allah that they did not say [anything against the Prophet (^)] while they had said the word of disbelief and disbelieved after their [pretense of] IsLam and planned that which they were not to attain. And they were not resentful except [for the fact] that Allah and His Messenger had enriched them of His bounty. So if they repent, it is better for them; but if they turn away, Allah will punish them with a painful punishment in this world and the Hereafter. And there will not be for them on earth any protector or helper. (QS. At-Tawbah, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! நயவஞ்சகர்களாகிய) இவர்கள் நிராகரிப்பான வார்த்தையை மெய்யாகவே கூறியிருந்தும் (அதனைத்) தாங்கள் கூறவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அன்றி, இவர்கள் இஸ்லாமில் சேர்ந்தபின் பின்னர் (அதனை) நிராகரித்தும் இருக்கின்றனர். (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் அவர்கள் முயற்சித்தனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், தங்கள் அருளைக் கொண்டு இவர்களை சீமான்கள் ஆக்கியதற்காகவா (முஸ்லிம்களாகிய உங்களை) அவர்கள் வெறுக்கின்றனர். இனியேனும் அவர்கள் கைசேதப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரி விலகிக் கொண்டால் (அது) அவர்களுக்கே நன்மையாகும். அன்றி, அவர்கள் புறக்கணித்தாலோ இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை மிகத் துன்புறுத்தும் வேதனையால் நோவினை செய்வான். அவர்களை பாதுகாப்பவர்களோ உதவி செய்பவர்களோ இவ்வுலகில் (ஒருவரும்) இல்லை. (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௭௪)

Jan Trust Foundation

இவர்கள் நிச்சயமாக “குஃப்ருடைய” சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நயவஞ்சகர்கள்) தாங்கள் (தூதருக்கு எதிராக ஏதும்) கூறவில்லை என்று அல்லாஹ் மீது சத்தியமிடுன்றனர். நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் முஸ்லிமானதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ் அவர்களை துன்புறுத்தக்கூடிய வேதனையால் வேதனை செய்வான். பூமியில் அவர்களுக்கு (எந்த) ஒரு பாதுகாவலரும் இல்லை, எந்த ஓர் உதவியாளரும் இல்லை.