Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௫

Qur'an Surah At-Tawbah Verse 5

ஸூரத்துத் தவ்பா [௯]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا انْسَلَخَ الْاَشْهُرُ الْحُرُمُ فَاقْتُلُوا الْمُشْرِكِيْنَ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ وَخُذُوْهُمْ وَاحْصُرُوْهُمْ وَاقْعُدُوْا لَهُمْ كُلَّ مَرْصَدٍۚ فَاِنْ تَابُوْا وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ فَخَلُّوْا سَبِيْلَهُمْۗ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (التوبة : ٩)

fa-idhā insalakha
فَإِذَا ٱنسَلَخَ
Then when have passed
முடிந்துவிட்டால்
l-ashhuru
ٱلْأَشْهُرُ
the sacred months
மாதங்கள்
l-ḥurumu
ٱلْحُرُمُ
the sacred months
புனித(மானவை)
fa-uq'tulū
فَٱقْتُلُوا۟
then kill
கொல்லுங்கள்
l-mush'rikīna
ٱلْمُشْرِكِينَ
the polytheists
இணை வைப்பவர்களை
ḥaythu
حَيْثُ
wherever
எங்கு/கண்டீர்கள்
wajadttumūhum
وَجَدتُّمُوهُمْ
you find them
எங்கு/கண்டீர்கள் அவர்களை
wakhudhūhum
وَخُذُوهُمْ
and seize them
இன்னும் பிடியுங்கள் அவர்களை
wa-uḥ'ṣurūhum
وَٱحْصُرُوهُمْ
and besiege them
இன்னும் முற்றுகையிடுங்கள் அவர்களை
wa-uq'ʿudū
وَٱقْعُدُوا۟
and sit (in wait)
இன்னும் அமருங்கள்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்காக
kulla
كُلَّ
(at) every
ஒவ்வொரு
marṣadin
مَرْصَدٍۚ
place of ambush
பதுங்குமிடத்தில்
fa-in tābū
فَإِن تَابُوا۟
But if they repent
அவர்கள் திருந்தினால்
wa-aqāmū
وَأَقَامُوا۟
and establish
இன்னும் நிலைநிறுத்தினால்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
waātawū
وَءَاتَوُا۟
and give
இன்னும் கொடுத்தால்
l-zakata
ٱلزَّكَوٰةَ
the zakah
ஸகாத்தை
fakhallū
فَخَلُّوا۟
then leave
விட்டுவிடுங்கள்
sabīlahum
سَبِيلَهُمْۚ
their way
அவர்களுடைய வழியை
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
பெரும் கருணையாளன்

Transliteration:

Fa izansalakhal Ashhurul Hurumu faqtulul mushrikeena haisu wajattumoohum wa khuzoohum wahsuroohum qaq'udoo lahum kulla marsad; fa-in taaboo wa aqaamus Salaata wa aatawuz Zakaata fakhalloo sabeelahum; innal laaha Ghafoorur Raheem (QS. at-Tawbah:5)

English Sahih International:

And when the inviolable months have passed, then kill the polytheists wherever you find them and capture them and besiege them and sit in wait for them at every place of ambush. But if they should repent, establish prayer, and give Zakah, let them [go] on their way. Indeed, Allah is Forgiving and Merciful. (QS. At-Tawbah, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(ஒவ்வொரு வருடத்திலும் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய சிறப்புற்ற இந்நான்கு மாதங்களிலும் போர் புரிவது ஆகாது.) சிறப்புற்ற (இந் நான்கு) மாதங்கள் சென்றுவிட்டால் இணைவைப்பவர்களைக் கண்ட இடமெல்லாம் வெட்டுங்கள்; அவர்களைச் சிறைப்பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்கள் வரவை எதிர்பார்த்து) அவர்களுக்காக நீங்கள் பதுங்கியிருங்கள். அவர்கள் (தங்கள் விஷமத்திலிருந்தும், நிராகரிப்பில் இருந்தும்) பாவத்திலிருந்து விலகி (நம்பிக்கை கொண்டு) தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள். (அவர்கள் விஷயத்தில் குறுக்கிடாதீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௫)

Jan Trust Foundation

(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

புனித மாதங்கள் முடிந்துவிட்டால் இணைவைப்பவர்களை -நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும்- கொல்லுங்கள்; அவர்களை(ச்சிறைப்) பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள்; ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்களை எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள். அவர்கள் திருந்தி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்தால் அவர்களுடைய வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன் பெரும் கருணையாளன்.