Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௪௬

Qur'an Surah At-Tawbah Verse 46

ஸூரத்துத் தவ்பா [௯]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَلَوْ اَرَادُوا الْخُرُوْجَ لَاَعَدُّوْا لَهٗ عُدَّةً وَّلٰكِنْ كَرِهَ اللّٰهُ انْۢبِعَاثَهُمْ فَثَبَّطَهُمْ وَقِيْلَ اقْعُدُوْا مَعَ الْقٰعِدِيْنَ (التوبة : ٩)

walaw arādū
وَلَوْ أَرَادُوا۟
And if they had wished
அவர்கள் நாடியிருந்தால்
l-khurūja
ٱلْخُرُوجَ
(to) go forth
வெளியேறுவதை
la-aʿaddū
لَأَعَدُّوا۟
surely they (would) have prepared
ஏற்பாடு செய்திருப்பார்கள்
lahu
لَهُۥ
for it
அதற்கு
ʿuddatan
عُدَّةً
(some) preparation
ஒரு தயாரிப்பை
walākin
وَلَٰكِن
But
எனினும்
kariha
كَرِهَ
Allah disliked
வெறுத்தான்
l-lahu
ٱللَّهُ
Allah disliked
அல்லாஹ்
inbiʿāthahum
ٱنۢبِعَاثَهُمْ
their being sent
அவர்கள் புறப்படுவதை
fathabbaṭahum
فَثَبَّطَهُمْ
so He made them lag behind
ஆகவே தடுத்து விட்டான்/அவர்களை
waqīla
وَقِيلَ
and it was said
இன்னும் கூறப்பட்டது
uq'ʿudū
ٱقْعُدُوا۟
"Sit
தங்கி விடுங்கள்
maʿa
مَعَ
with
உடன்
l-qāʿidīna
ٱلْقَٰعِدِينَ
those who sit"
தங்குபவர்கள்

Transliteration:

Wa law araadul khurooja la-'addoo lahoo 'uddatanw wa laakin karihal laahum bi'aasahum fasabbatahum wa qeelaq 'udoo ma'al qaa'ideen (QS. at-Tawbah:46)

English Sahih International:

And if they had intended to go forth, they would have prepared for it [some] preparation. But Allah disliked their being sent, so He kept them back, and they were told, "Remain [behind] with those who remain." (QS. At-Tawbah, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அவர்கள் (உங்களுடன் போருக்கு) புறப்பட (உண்மை யாகவே) எண்ணியிருந்தால் அதற்கு வேண்டிய தயாரிப்புகளை (முன்னதாகவே) அவர்கள் செய்திருப்பார்கள். எனினும் (உங்களுடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து அவர்கள் புறப்படாது தடை செய்துவிட்டான். ஆகவே (முதியோர் சிறியோர் பெண்கள் போன்ற, போருக்கு வரமுடியாது வீட்டில்) தங்குபவர்களுடன் நீங்களும் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது (போலும்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௪௬)

Jan Trust Foundation

அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) “தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (போருக்கு) வெளியேறுவதை நாடியிருந்தால் அதற்கு ஒரு தயாரிப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். எனினும் (உம்முடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்தான். ஆகவே, அவர்களைத் தடுத்து விட்டான். தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்றும் (அவர்களுக்கு) கூறப்பட்டது.