Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தவ்பா வசனம் ௩௫

Qur'an Surah At-Tawbah Verse 35

ஸூரத்துத் தவ்பா [௯]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَّوْمَ يُحْمٰى عَلَيْهَا فِيْ نَارِ جَهَنَّمَ فَتُكْوٰى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوْبُهُمْ وَظُهُوْرُهُمْۗ هٰذَا مَا كَنَزْتُمْ لِاَنْفُسِكُمْ فَذُوْقُوْا مَا كُنْتُمْ تَكْنِزُوْنَ (التوبة : ٩)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yuḥ'mā
يُحْمَىٰ
it will be heated [on it]
பழுக்கக்காய்ச்சப்படும்
ʿalayhā
عَلَيْهَا
it will be heated [on it]
அவற்றின் மீது
fī nāri
فِى نَارِ
in the Fire
நெருப்பில்
jahannama
جَهَنَّمَ
(of) Hell
நரகம்
fatuk'wā
فَتُكْوَىٰ
and will be branded
சூடிடப்படும்
bihā
بِهَا
with it
அவற்றைக் கொண்டு
jibāhuhum
جِبَاهُهُمْ
their foreheads
நெற்றிகள்/அவர்களுடைய
wajunūbuhum
وَجُنُوبُهُمْ
and their flanks
இன்னும் விலாக்கள்/அவர்களுடைய
waẓuhūruhum
وَظُهُورُهُمْۖ
and their backs
இன்னும் முதுகுகள்/அவர்களுடைய
hādhā
هَٰذَا
"This
இவை
mā kanaztum
مَا كَنَزْتُمْ
(is) what you hoarded
எவை/சேமித்தீர்கள்
li-anfusikum
لِأَنفُسِكُمْ
for yourselves
உங்களுக்காக
fadhūqū
فَذُوقُوا۟
so taste
ஆகவே சுவையுங்கள்
mā kuntum
مَا كُنتُمْ
what you used to
எவற்றை/இருந்தீர்கள்
taknizūna
تَكْنِزُونَ
hoard"
சேமிப்பீர்கள்

Transliteration:

Yawma yuhmaa 'alaihaa fee naari jahannama fatukwaa bihaa jibaahuhum haazaa maa kanaztum li anfusikum fazooqoo maa kuntum taknizoon (QS. at-Tawbah:35)

English Sahih International:

The Day when it will be heated in the fire of Hell and seared therewith will be their foreheads, their flanks, and their backs, [it will be said], "This is what you hoarded for yourselves, so taste what you used to hoard." (QS. At-Tawbah, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு "உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைகள்தான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும் நாளை (நபியே! நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள்.) (ஸூரத்துத் தவ்பா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவற்றின் மீது நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும் நாளில். அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளும், அவர்களுடைய விலாக்களும், அவர்களுடைய முதுகுகளும் சூடிடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.”