Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௧௧

Qur'an Surah Al-Anfal Verse 11

ஸூரத்துல் அன்ஃபால் [௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَاۤءِ مَاۤءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَۗ (الأنفال : ٨)

idh
إِذْ
When
சமயம்
yughashīkumu
يُغَشِّيكُمُ
He covered you
சூழவைக்கிறான்/உங்கள் மீது
l-nuʿāsa
ٱلنُّعَاسَ
with [the] slumber
சிறு தூக்கத்தை
amanatan
أَمَنَةً
a security
அச்சமற்றிருப்பதற்காக
min'hu
مِّنْهُ
from Him
தன் புறத்திலிருந்து
wayunazzilu
وَيُنَزِّلُ
and sent down
இன்னும் இறக்குகிறான்
ʿalaykum
عَلَيْكُم
upon you
உங்கள் மீது
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
இருந்து/வானம்,மேகம்
māan
مَآءً
water
நீரை, மழையை
liyuṭahhirakum
لِّيُطَهِّرَكُم
so that He may purify you
அவன் சுத்தப்படுத்துவற்காக உங்களை
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
wayudh'hiba
وَيُذْهِبَ
and take away
இன்னும் அவன் போக்குவதற்காக
ʿankum
عَنكُمْ
from you
உங்களை விட்டு
rij'za
رِجْزَ
evil (suggestions)
அசுத்தத்தை
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
(of) the Shaitaan
ஷைத்தானுடைய
waliyarbiṭa
وَلِيَرْبِطَ
And to strengthen
இன்னும் அவன் பலப்படுத்துவதற்காக
ʿalā qulūbikum
عَلَىٰ قُلُوبِكُمْ
[on] your hearts
உங்கள் உள்ளங்களை
wayuthabbita
وَيُثَبِّتَ
and make firm
இன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காக
bihi
بِهِ
with it
அதன் மூலம்
l-aqdāma
ٱلْأَقْدَامَ
your feet
பாதங்களை

Transliteration:

Iz yughashsheekumun nu'assa amanatam minhu wa yunazzilu 'alaikum minas samaaa'i maaa'al liyutah hirakum bihee wa yuzhiba 'ankum rijzash Shaitaani wa liyarbita 'ala quloobikum wa yusabbita bihil aqdaam (QS. al-ʾAnfāl:11)

English Sahih International:

[Remember] when He overwhelmed you with drowsiness [giving] security from Him and sent down upon you from the sky, rain by which to purify you and remove from you the evil [suggestions] of Satan and to make steadfast your hearts and plant firmly thereby your feet. (QS. Al-Anfal, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடைந் தவர்களாக, சிறியதொரு நித்திரை உங்களைப் பொதிந்துகொள்ளும் படி (இறைவன்) செய்ததை நினைத்துப் பாருங்கள்! அன்றி (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள் சுத்தப்படுத்திக் கொள்வதற் காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்கி விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) வானத்திலிருந்து மழையை பொழியச் செய்தான். (ஸூரத்துல் அன்ஃபால், வசனம் ௧௧)

Jan Trust Foundation

(நினைவு கூறுங்கள்|) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நம்பிக்கையாளர்களே! நீங்கள்) அச்சமற்றிருப்பதற்காக (அல்லாஹ்) தன் புறத்திலிருந்து சிறு தூக்கத்தை உங்கள் மீது சூழவைத்த சமயத்தை நினைவு கூருவீராக. உங்களை அதன் மூலம் (மழையின் மூலம்) அவன் சுத்தப்படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்குவதற்காகவும், உங்கள் உள்ளங்களை அவன் பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் (உங்கள்) பாதங்களை அவன் உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) உங்கள் மீது வானத்திலிருந்து மழையை பொழியச் செய்கிறான் (இறக்குகிறான்).