Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஜின்னு வசனம் ௨௩

Qur'an Surah Al-Jinn Verse 23

ஸூரத்துல் ஜின்னு [௭௨]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖۗ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ (الجن : ٧٢)

illā balāghan
إِلَّا بَلَٰغًا
But (the) notification
தவிர/ எடுத்துரைப்பதற்கும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
warisālātihi
وَرِسَٰلَٰتِهِۦۚ
and His Messages"
அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும்
waman
وَمَن
And whoever
எவர்
yaʿṣi
يَعْصِ
disobeys
மாறு செய்வாரோ
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
அவனது தூதருக்கும்
fa-inna
فَإِنَّ
then indeed
நிச்சயமாக
lahu
لَهُۥ
for him
அவருக்கு
nāra
نَارَ
(is the) Fire
நெருப்புதான்
jahannama
جَهَنَّمَ
(of) Hell
நரக
khālidīna
خَٰلِدِينَ
(they will) abide
அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்
fīhā
فِيهَآ
therein
அதில்
abadan
أَبَدًا
forever
எப்போதும்

Transliteration:

Illaa balaagham minal laahi wa risaalaatih; wa many ya'sil laaha wa rasoolahoo fa inna lahoo naara jahannama khaalideena feehaaa abadaa (QS. al-Jinn:23)

English Sahih International:

But [I have for you] only notification from Allah, and His messages." And whoever disobeys Allah and His Messenger – then indeed, for him is the fire of Hell; they will abide therein forever. (QS. Al-Jinn, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள். (ஸூரத்துல் ஜின்னு, வசனம் ௨௩)

Jan Trust Foundation

“அல்லாஹ்விடமிருந்து (வருவதை) எடுத்துச் சொல்வதும், அவனுடைய தூதுவத்துவத்தையும் தவிர (எனக்கு வேறில்லை) எனவே, எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான். அதில் அவர் என்றென்றும் இருப்பார்” என (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.