Skip to content

ஸூரா ஸூரத்து நூஹ் - Word by Word

Nuh

(Nūḥ)

bismillaahirrahmaanirrahiim

اِنَّآ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnā nūḥan
أَرْسَلْنَا نُوحًا
அனுப்பினோம்/நூஹை
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின் பக்கம்
an andhir
أَنْ أَنذِرْ
ஏனெனில், நீர் எச்சரிப்பீராக!
qawmaka
قَوْمَكَ
உமது மக்களை
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yatiyahum
أَن يَأْتِيَهُمْ
அவர்களுக்கு வருவதற்கு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧)
Tafseer

قَالَ يٰقَوْمِ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ ٢

qāla
قَالَ
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்" என்றும், ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨)
Tafseer

اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِيْعُوْنِۙ ٣

ani uʿ'budū
أَنِ ٱعْبُدُوا۟
அதாவது, நீங்கள் வணங்குங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ittaqūhu
وَٱتَّقُوهُ
இன்னும் அவனை அஞ்சுங்கள்
wa-aṭīʿūni
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
"அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்" என்றும், ([௭௧] ஸூரத்து நூஹ்: ௩)
Tafseer

يَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرْكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَاۤءَ لَا يُؤَخَّرُۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٤

yaghfir
يَغْفِرْ
அவன் மன்னிப்பான்
lakum
لَكُم
உங்களுக்கு
min dhunūbikum
مِّن ذُنُوبِكُمْ
உங்கள் பாவங்களை
wayu-akhir'kum
وَيُؤَخِّرْكُمْ
இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்
ilā ajalin
إِلَىٰٓ أَجَلٍ
தவணை வரை
musamman
مُّسَمًّىۚ
குறிப்பிட்ட
inna
إِنَّ
நிச்சயமாக
ajala
أَجَلَ
தவணை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
idhā jāa
إِذَا جَآءَ
வந்துவிட்டால்
lā yu-akharu
لَا يُؤَخَّرُۖ
அது பிற்படுத்தப்படாது
law kuntum taʿlamūna
لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினார். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௪)
Tafseer

قَالَ رَبِّ اِنِّيْ دَعَوْتُ قَوْمِيْ لَيْلًا وَّنَهَارًاۙ ٥

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
daʿawtu
دَعَوْتُ
அழைத்தேன்
qawmī
قَوْمِى
எனது மக்களை
laylan
لَيْلًا
இரவிலும்
wanahāran
وَنَهَارًا
பகலிலும்
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதனை மறுத்து அவரைப் புறக்கணித்துவிடவே, அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என்னுடைய மக்களை இரவு பகலாக அழைத்தேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௫)
Tafseer

فَلَمْ يَزِدْهُمْ دُعَاۤءِيْٓ اِلَّا فِرَارًا ٦

falam
فَلَمْ
அதிகப்படுத்தவில்லை
yazid'hum
يَزِدْهُمْ
அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
duʿāī
دُعَآءِىٓ
எனது அழைப்பு
illā
إِلَّا
தவிர
firāran
فِرَارًا
விரண்டோடுவதை
வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என்னுடைய அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. ([௭௧] ஸூரத்து நூஹ்: ௬)
Tafseer

وَاِنِّيْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْٓا اَصَابِعَهُمْ فِيْٓ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًاۚ ٧

wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
kullamā daʿawtuhum
كُلَّمَا دَعَوْتُهُمْ
அவர்களை அழைத்த போதெல்லாம்
litaghfira
لِتَغْفِرَ
நீ மன்னிப்பதற்காக
lahum
لَهُمْ
அவர்களை
jaʿalū
جَعَلُوٓا۟
ஆக்கிக் கொண்டனர்
aṣābiʿahum
أَصَٰبِعَهُمْ
தங்கள் விரல்களை
fī ādhānihim
فِىٓ ءَاذَانِهِمْ
தங்கள் காதுகளில்
wa-is'taghshaw
وَٱسْتَغْشَوْا۟
இன்னும் மூடிக்கொண்டனர்
thiyābahum
ثِيَابَهُمْ
தங்கள் ஆடைகளால்
wa-aṣarrū
وَأَصَرُّوا۟
இன்னும் பிடிவாதம் பிடித்தனர்
wa-is'takbarū
وَٱسْتَكْبَرُوا۟
இன்னும் பெருமையடித்தனர்
is'tik'bāran
ٱسْتِكْبَارًا
பெருமையடித்தல்
நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்தபோதெல்லாம், தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களைப் புகுத்தி அடைத்துக்கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௭)
Tafseer

ثُمَّ اِنِّيْ دَعَوْتُهُمْ جِهَارًاۙ ٨

thumma innī
ثُمَّ إِنِّى
பிறகு/நிச்சயமாக நான்
daʿawtuhum
دَعَوْتُهُمْ
அவர்களை அழைத்தேன்
jihāran
جِهَارًا
உரக்க
பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௮)
Tafseer

ثُمَّ اِنِّيْٓ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًاۙ ٩

thumma
ثُمَّ
பிறகு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿlantu
أَعْلَنتُ
வெளிப்படையாகப் பேசினேன்
lahum
لَهُمْ
அவர்களிடம்
wa-asrartu
وَأَسْرَرْتُ
இன்னும் இரகசியமாகப் பேசினேன்
lahum
لَهُمْ
அவர்களிடம்
is'rāran
إِسْرَارًا
தனியாக, இரகசியமாக பேசுதல்
அன்றி, நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௯)
Tafseer
௧௦

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ ١٠

faqul'tu
فَقُلْتُ
நான் கூறினேன்
is'taghfirū
ٱسْتَغْفِرُوا۟
நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவனிடம்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
ghaffāran
غَفَّارًا
மகா மன்னிப்பாளனாக
"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௦)
Tafseer