Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௩

Qur'an Surah Al-Qalam Verse 43

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗوَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سَالِمُوْنَ (القلم : ٦٨)

khāshiʿatan
خَٰشِعَةً
Humbled
தாழ்ந்து இருக்கும்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
their eyes
அவர்களின் பார்வைகள்
tarhaquhum
تَرْهَقُهُمْ
will cover them
அவர்களை சூழும்
dhillatun
ذِلَّةٌۖ
humiliation
இழிவு
waqad kānū yud'ʿawna
وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ
And indeed they were called
அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
ilā l-sujūdi wahum sālimūna
إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
to prostrate while they (were) sound
தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது

Transliteration:

Khaashi'atan absaaruhum tarhaquhum zillatunw wa qad kaanoo yud'awna ilassujoodi wa hum saalimoon (QS. al-Q̈alam:43)

English Sahih International:

Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound. (QS. Al-Qalam, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதனை நிராகரித்துவிட்டனர்.) (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௩)

Jan Trust Foundation

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் பார்வைகள் தாழ்ந்து இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலகத்தில் வாழ்ந்தபோது,) அவர்கள் சுகமானவர்களாக இருந்த போது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)