Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௮

Qur'an Surah Al-Mulk Verse 28

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَكَنِيَ اللّٰهُ وَمَنْ مَّعِيَ اَوْ رَحِمَنَاۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ (الملك : ٦٧)

qul
قُلْ
Say
கூறுவிராக
ara-aytum
أَرَءَيْتُمْ
"Have you seen
அறிவியுங்கள்
in ahlakaniya
إِنْ أَهْلَكَنِىَ
if destroys me
என்னை(யும்) அழித்துவிட்டால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
waman maʿiya
وَمَن مَّعِىَ
and whoever (is) with me
என்னுடன் இருப்பவர்களையும்
aw
أَوْ
or
அல்லது
raḥimanā
رَحِمَنَا
has mercy upon us
எங்கள் மீது கருணை புரிந்தால்
faman
فَمَن
then who
யார்?
yujīru
يُجِيرُ
(can) protect
காப்பாற்றுவார்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
the disbelievers
நிராகரிப்பாளர்களை
min ʿadhābin
مِنْ عَذَابٍ
from a punishment
தண்டனையிலிருந்து
alīmin
أَلِيمٍ
painful"
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Qul ara'aytum in ahlaka niyal laahu wa mam ma'iya aw rahimanaa famai-yujeerul kaafireena min 'azaabin aleem (QS. al-Mulk:28)

English Sahih International:

Say, [O Muhammad], "Have you considered: whether Allah should cause my death and those with me or have mercy upon us, who can protect the disbelievers from a painful punishment?" (QS. Al-Mulk, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகின்றபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா? (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௮)

Jan Trust Foundation

கூறுவீராக| அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிட்டால் அல்லது அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) வலி தரக்கூடிய தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை வேதனையில் இருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள்.