Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௫

Qur'an Surah Al-Mulk Verse 25

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (الملك : ٦٧)

wayaqūlūna
وَيَقُولُونَ
And they say
அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
"When
எப்போது நிகழும்
hādhā
هَٰذَا
(is) this
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
promise
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful?"
உண்மையாளர்களாக

Transliteration:

Wa yaqooloona mataa haazal wa'du in kuntum saadiqeen (QS. al-Mulk:25)

English Sahih International:

And they say, "When is this promise, if you should be truthful?" (QS. Al-Mulk, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறிருந்தும் நம்பிக்கையாளர்களை நோக்கி, அவர்கள்) "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)" என்று கேட்கின்றார்கள். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௫)

Jan Trust Foundation

ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(நபியே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் எழுப்பப்படுவோம் என்ற) இந்த வாக்கு எப்பொழுது நிகழும்” (என்று எங்களுக்கு அறிவியுங்கள்!”) என அவர்கள் கூறுகின்றனர்.