Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௩

Qur'an Surah At-Tahrim Verse 3

ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ اَسَرَّ النَّبِيُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًاۚ فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍۚ فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَاۗ قَالَ نَبَّاَنِيَ الْعَلِيْمُ الْخَبِيْرُ (التحريم : ٦٦)

wa-idh asarra l-nabiyu
وَإِذْ أَسَرَّ ٱلنَّبِىُّ
And when confided the Prophet
இரகசியமாக பேசியபோது/நபி
ilā baʿḍi
إِلَىٰ بَعْضِ
to one
சிலரிடம்
azwājihi
أَزْوَٰجِهِۦ
(of) his wives
தனது மனைவிமார்களில்
ḥadīthan
حَدِيثًا
a statement
ஒரு பேச்சை
falammā nabba-at bihi
فَلَمَّا نَبَّأَتْ بِهِۦ
and when she informed about it
அவள் அறிவித்து விட்டபோது/அதை
wa-aẓharahu
وَأَظْهَرَهُ
and made it apparent
இன்னும் அதை வெளிப்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ʿalayhi
عَلَيْهِ
to him
அவருக்கு
ʿarrafa
عَرَّفَ
he made known
அவர் அறிவித்தார்
baʿḍahu
بَعْضَهُۥ
a part of it
அதில் சிலவற்றை
wa-aʿraḍa
وَأَعْرَضَ
and avoided
இன்னும் புறக்கணித்து விட்டார்
ʿan baʿḍin
عَنۢ بَعْضٍۖ
[of] a part
சிலவற்றை
falammā nabba-ahā bihi
فَلَمَّا نَبَّأَهَا بِهِۦ
Then when he informed her about it
அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை
qālat
قَالَتْ
she said
அவள் கூறினாள்
man
مَنْ
"Who
யார்
anba-aka
أَنۢبَأَكَ
informed you
உமக்கு அறிவித்தார்
hādhā
هَٰذَاۖ
this?"
இதை
qāla
قَالَ
He said
அவர் கூறினார்
nabba-aniya
نَبَّأَنِىَ
"Has informed me
எனக்கு அறிவித்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
the All-Knower
நன்கறிபவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
the All-Aware"
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Wa iz asarran nabiyyu ilaa ba'di azwaajihee hadeesan falammaa nabba at bihee wa azharahul laahu 'alaihi 'arrafa ba'dahoo wa a'rada 'am ba'din falammaa nabba ahaa bihee qaalat man amba aka haaza qaala nabba aniyal 'aleemul khabeer (QS. at-Taḥrīm:3)

English Sahih International:

And [remember] when the Prophet confided to one of his wives a statement; and when she informed [another] of it and Allah showed it to him, he made known part of it and ignored a part. And when he informed her about it, she said, "Who told you this?" He said, "I was informed by the Knowing, the Aware." (QS. At-Tahrim, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நமது) நபி தன்னுடைய மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதனை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்துவிட்டார். அதனை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி "இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" எனக் கேட்டார். அதற்கு அவர் "(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதனை எனக்கு அறிவித்தான்" என்று கூறினார்கள். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௩)

Jan Trust Foundation

மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்| “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபி தனது மனைவிமார்களில் சிலரிடம் ஒரு பேச்சை இரகசியமாக பேசியபோது, அவள் அதை (மற்றொரு மனைவியிடம்) அறிவித்து, அல்லாஹ் அவருக்கு (-தனது நபிக்கு) அதை வெளிப்படுத்திய போது அதில் (-அந்த பேச்சில்) சிலவற்றை அவர் (அவளுக்கு) அறிவித்தார்; சிலவற்றை (அறிவிக்காமல்) புறக்கணித்துவிட்டார். அவர் அவளுக்கு அதை (-அந்த சிலவற்றை) அறிவித்த போது அவள் கூறினாள்: யார் உமக்கு இதை அறிவித்தார்” என்று. நன்கறிபவன், ஆழ்ந்தறிபவன் (ஆகிய அல்லாஹ்) எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.