Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௧௦

Qur'an Surah At-Tahrim Verse 10

ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍۗ كَانَتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْـًٔا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدَّاخِلِيْنَ (التحريم : ٦٦)

ḍaraba
ضَرَبَ
Presents
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mathalan
مَثَلًا
an example
ஓர் உதாரணமாக
lilladhīna kafarū
لِّلَّذِينَ كَفَرُوا۟
for those who disbelieved
நிராகரித்தவர்களுக்கு
im'ra-ata
ٱمْرَأَتَ
(the) wife
மனைவியையும்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
wa-im'ra-ata
وَٱمْرَأَتَ
(and the) wife
மனைவியையும்
lūṭin
لُوطٍۖ
(of) Lut
லூத்துடைய
kānatā
كَانَتَا
They were
இருவரும் இருந்தனர்
taḥta
تَحْتَ
under
கீழ்
ʿabdayni
عَبْدَيْنِ
two [slaves]
இரு அடியார்களுக்கு
min ʿibādinā
مِنْ عِبَادِنَا
of Our slaves
நமது அடியார்களில்
ṣāliḥayni
صَٰلِحَيْنِ
righteous
நல்ல(வர்கள்)
fakhānatāhumā
فَخَانَتَاهُمَا
but they both betrayed them
அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர்
falam yugh'niyā
فَلَمْ يُغْنِيَا
so not they availed
ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை
ʿanhumā
عَنْهُمَا
both of them
அவ்விருவரைவிட்டும்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
shayan waqīla
شَيْـًٔا وَقِيلَ
(in) anything and it was said
எதையும்/கூறப்பட்டது
ud'khulā
ٱدْخُلَا
"Enter
நீங்கள் இருவரும் நுழையுங்கள்
l-nāra
ٱلنَّارَ
the Fire
நரகத்தில்
maʿa l-dākhilīna
مَعَ ٱلدَّٰخِلِينَ
with those who enter"
நுழைபவர்களுடன்

Transliteration:

Darabal laahu masalal lillazeena kafarum ra ata Noobinw wamra ata Loot, kaanataa tahta 'abdaini min 'ibaadinaa saalihaini fakhaanataahumaa falam yughniyaa 'anhumaa minal laahi shai anw-wa qeelad khulan naara ma'ad Daakhileen (QS. at-Taḥrīm:10)

English Sahih International:

Allah presents an example of those who disbelieved: the wife of Noah and the wife of Lot. They were under two of Our righteous servants but betrayed them, so they [i.e., those prophets] did not avail them from Allah at all, and it was said, "Enter the Fire with those who enter." (QS. At-Tahrim, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கின்றான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன் மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்களிருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து யாதொன்றையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) "நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுங்கள்" என்றே கூறப்பட்டது. (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௧௦)

Jan Trust Foundation

நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் நிராகரித்தவர்களுக்கு ஓர் உதாரணமாக அல்லாஹ் விவரிக்கின்றான். அவர்கள் இருவரும் நமது அடியார்களில் இரு நல்ல அடியார்களுக்கு கீழ் இருந்தனர். அவ்விருவரும் அவ்விருவருக்கும் (-இரு நபிமார்களுக்கும் மார்க்கத்தில்) மோசடி செய்தனர். ஆகவே, அவ்விருவரும் அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையில் இருந்து) எதையும் தடுக்க (முடிய)வில்லை. (அவ்விருவருக்கும்) கூறப்பட்டது: (நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நரகத்தில் நுழையுங்கள்.