Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௨

Qur'an Surah At-Talaq Verse 2

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَيْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِيْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ ۗذٰلِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ەۗ وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ (الطلاق : ٦٥)

fa-idhā balaghna
فَإِذَا بَلَغْنَ
Then when they have reached
அவர்கள் அடைந்து விட்டால்
ajalahunna
أَجَلَهُنَّ
their term
தங்கள் தவணையை
fa-amsikūhunna
فَأَمْسِكُوهُنَّ
then retain them
தடுத்து வையுங்கள் அவர்களை
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
with kindness
நல்ல முறையில்
aw
أَوْ
or
அல்லது
fāriqūhunna
فَارِقُوهُنَّ
part with them
நீங்கள் பிரிந்து விடுங்கள் அவர்களை
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
with kindness
நல்ல முறையில்
wa-ashhidū
وَأَشْهِدُوا۟
And take witness
இன்னும் சாட்சியாக்குங்கள்
dhaway ʿadlin
ذَوَىْ عَدْلٍ
two men just
நீதமான இருவரை
minkum
مِّنكُمْ
among you
உங்களில்
wa-aqīmū
وَأَقِيمُوا۟
and establish
இன்னும் நிலை நிறுத்துங்கள்
l-shahādata
ٱلشَّهَٰدَةَ
the testimony
சாட்சியத்தை
lillahi
لِلَّهِۚ
for Allah
அல்லாஹ்விற்காக
dhālikum
ذَٰلِكُمْ
That
இவை
yūʿaẓu
يُوعَظُ
is instructed
உபதேசிக்கப் படுகின்றார்
bihi
بِهِۦ
with it
இவற்றின் மூலம்
man kāna yu'minu
مَن كَانَ يُؤْمِنُ
whoever [is] believes
எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வையும்
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
and the Day the Last
மறுமை நாளையும்
waman
وَمَن
And whoever
எவர்
yattaqi
يَتَّقِ
fears
அஞ்சுவாரோ
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
yajʿal
يَجْعَل
He will make
ஏற்படுத்துவான்
lahu
لَّهُۥ
for him
அவருக்கு
makhrajan
مَخْرَجًا
a way out
ஒரு தீர்வை

Transliteration:

Fa izaa balaghna ajalahunna fa amsikoohunna bima'roofin aw faariqoohunna bima'roofinw wa ashhidoo zawai 'adlim minkum wa aqeemush shahaadata lillaah; zaalikum yoo'azu bihee man kaana yu'minu billaahi wal yawmil aakhir; wa many yattaqil laaha yaj'al lahoo makhrajaa (QS. aṭ-Ṭalāq̈:2)

English Sahih International:

And when they have [nearly] fulfilled their term, either retain them according to acceptable terms or part with them according to acceptable terms. And bring to witness two just men from among you and establish the testimony for [the acceptance of] Allah. That is instructed to whoever should believe in Allah and the Last Day. And whoever fears Allah – He will make for him a way out (QS. At-Talaq, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்தபோதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகின்றது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௨)

Jan Trust Foundation

ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் (அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைந்துவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். உங்களில் நீதமான இருவரை (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) சாட்சியாக்குங்கள்! அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள்! இவை (-இந்த சட்டங்கள்) எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகின்றார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்.