Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௧

Qur'an Surah At-Talaq Verse 1

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّآ اَنْ يَّأْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍۗ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ۗوَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ۗ لَا تَدْرِيْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا (الطلاق : ٦٥)

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
O! Prophet!
நபியே!
idhā ṭallaqtumu
إِذَا طَلَّقْتُمُ
When you divorce
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
[the] women
பெண்களை
faṭalliqūhunna
فَطَلِّقُوهُنَّ
then divorce them
அவர்களை விவாகரத்து செய்யுங்கள்
liʿiddatihinna
لِعِدَّتِهِنَّ
for their waiting period
அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு
wa-aḥṣū
وَأَحْصُوا۟
and keep count
இன்னும் சரியாக கணக்கிடுங்கள்
l-ʿidata
ٱلْعِدَّةَۖ
(of) the waiting period
இத்தாவை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
and fear
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
rabbakum
رَبَّكُمْۖ
your Lord
உங்கள் இறைவனாகிய
lā tukh'rijūhunna
لَا تُخْرِجُوهُنَّ
(Do) not expel them
அவர்களை வெளியேற்றாதீர்கள்
min buyūtihinna
مِنۢ بُيُوتِهِنَّ
from their houses
அவர்களின் இல்லங்களில் இருந்து
walā yakhruj'na
وَلَا يَخْرُجْنَ
and not they should leave
இன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம்
illā an yatīna
إِلَّآ أَن يَأْتِينَ
except that they commit
அவர்கள் செய்தாலே தவிர
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
an immorality
தீய செயலை
mubayyinatin
مُّبَيِّنَةٍۚ
clear
தெளிவான
watil'ka
وَتِلْكَ
And these
இவை
ḥudūdu
حُدُودُ
(are the) limits
சட்டங்களாகும்
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
waman yataʿadda
وَمَن يَتَعَدَّ
And whoever transgresses
எவர்/மீறுவாரோ
ḥudūda
حُدُودَ
(the) limits
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
faqad
فَقَدْ
then certainly
திட்டமாக
ẓalama
ظَلَمَ
he has wronged
அநீதி இழைத்துக் கொண்டார்
nafsahu
نَفْسَهُۥۚ
himself
தனக்குத் தானே
lā tadrī
لَا تَدْرِى
Not you know
நீர் அறியமாட்டீர்
laʿalla l-laha yuḥ'dithu
لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ
Perhaps Allah will bring about
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
after that
இதற்குப் பின்னர்
amran
أَمْرًا
a matter
ஒரு காரியத்தை

Transliteration:

Yaaa ayyuhan nabiyyu izaa tallaqtummun nisaaa'a fatalliqoohunna li'iddatihinna wa ahsul'iddata; wattaqul laaha rabbakum laa tukhri joohunna mim bu-yootihinna wa laa yakhrujna illaaa any yaateema bifaahishatim mubaiyinah; wa tilka hudoodul laah; wa many yata'adda hudoodal laahi faqad zalama nafsha; laa tadree la'allal laaha yuhdisu ba'dazaalika amraa (QS. aṭ-Ṭalāq̈:1)

English Sahih International:

O Prophet, when you [Muslims] divorce women, divorce them for [the commencement of] their waiting period and keep count of the waiting period, and fear Allah, your Lord. Do not turn them out of their [husbands'] houses, nor should they [themselves] leave [during that period] unless they are committing a clear immorality. And those are the limits [set by] Allah. And whoever transgresses the limits of Allah has certainly wronged himself. You know not; perhaps Allah will bring about after that a [different] matter. (QS. At-Talaq, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும். (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௧)

Jan Trust Foundation

நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நபியே! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும் இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் - வரும்வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம், தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள்! அப்போது இத்தா முடிந்து விட்டாலும் புதிய திருமணம் மூலம் இருவரும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.)