Skip to content

ஸூரா ஸூரத்துத் தலாஃக் - Page: 2

At-Talaq

(aṭ-Ṭalāq̈)

௧௧

رَّسُوْلًا يَّتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِ اللّٰهِ مُبَيِّنٰتٍ لِّيُخْرِجَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ١١

rasūlan
رَّسُولًا
ஒரு தூதரை
yatlū
يَتْلُوا۟
ஓதிக் காண்பிக்கிறார்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
āyāti
ءَايَٰتِ
வசனங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
mubayyinātin
مُبَيِّنَٰتٍ
தெளிவான(வை)
liyukh'rija
لِّيُخْرِجَ
வெளியேற்றுவதற்காக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
mina l-ẓulumāti
مِنَ ٱلظُّلُمَٰتِ
இருள்களிலிருந்து
ilā l-nūri
إِلَى ٱلنُّورِۚ
ஒளியின் பக்கம்
waman yu'min
وَمَن يُؤْمِنۢ
எவர்(கள்)/நம்பிக்கை கொண்டார்(கள்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wayaʿmal
وَيَعْمَلْ
இன்னும் செய்வார்(கள்)
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
yud'khil'hu
يُدْخِلْهُ
அவர்களை பிரவேசிக்கவைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்குவார்கள்
fīhā abadan
فِيهَآ أَبَدًاۖ
அவற்றில்/எப்போதும்
qad
قَدْ
திட்டமாக
aḥsana
أَحْسَنَ
அழகாக வைத்திருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahu
لَهُۥ
அவர்களுக்கு
riz'qan
رِزْقًا
வாழ்வாதாரத்தை
அன்றி, ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கின்றான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகின்றார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களை சுவனபதிகளில் புகச் செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧௧)
Tafseer
௧௨

اَللّٰهُ الَّذِيْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّۗ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ەۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ࣖ ١٢

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
sabʿa samāwātin
سَبْعَ سَمَٰوَٰتٍ
ஏழு வானங்களையும்
wamina l-arḍi
وَمِنَ ٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
mith'lahunna
مِثْلَهُنَّ
அவைப் போன்றதையும்
yatanazzalu
يَتَنَزَّلُ
இறங்குகின்றன
l-amru
ٱلْأَمْرُ
கட்டளைகள்
baynahunna
بَيْنَهُنَّ
அவற்றுக்கு மத்தியில்
litaʿlamū
لِتَعْلَمُوٓا۟
நீங்கள் அறிவதற்காக
anna l-laha
أَنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
qad
قَدْ
திட்டமாக
aḥāṭa
أَحَاطَ
சூழ்ந்துள்ளான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்களையும்
ʿil'man
عِلْمًۢا
அறிவால்
ஏழு வானங்களையும், அவைகளைப் போல் பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவைகளை படைத்தான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧௨)
Tafseer