குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௭
Qur'an Surah At-Taghabun Verse 7
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنْ لَّنْ يُّبْعَثُوْاۗ قُلْ بَلٰى وَرَبِّيْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْۗ وَذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ (التغابن : ٦٤)
- zaʿama
- زَعَمَ
- Claim
- பிதற்றுகின்றனர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوٓا۟
- those who disbelieve
- நிராகரித்தவர்கள்
- an lan yub'ʿathū
- أَن لَّن يُبْعَثُوا۟ۚ
- that never will they be raised
- அறவே எழுப்பப்பட மாட்டார்கள்
- qul
- قُلْ
- Say
- நீர் கூறுவீராக!
- balā
- بَلَىٰ
- "Yes
- ஏன் இல்லை!
- warabbī
- وَرَبِّى
- by my Lord
- என் இறைவன் மீது சத்தியமாக
- latub'ʿathunna
- لَتُبْعَثُنَّ
- surely you will be raised;
- நிச்சயமாகஎழுப்பப்படுவீர்கள்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- latunabba-unna
- لَتُنَبَّؤُنَّ
- surely you will be informed
- நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்
- bimā ʿamil'tum
- بِمَا عَمِلْتُمْۚ
- of what you did
- நீங்கள் செய்தவற்றை
- wadhālika
- وَذَٰلِكَ
- And that
- அது
- ʿalā l-lahi
- عَلَى ٱللَّهِ
- for Allah
- அல்லாஹ்விற்கு
- yasīrun
- يَسِيرٌ
- (is) easy"
- மிக எளிதானதே!
Transliteration:
Za'amal lazeena kafarooo al-lany yub'asoo; qul balaa wa rabbee latub'asunna summa latunabba'unna bimaa 'amiltum; wa zaalika 'alal laahi yaseer(QS. at-Taghābun:7)
English Sahih International:
Those who disbelieve have claimed that they will never be resurrected. Say, "Yes, by my Lord, you will surely be resurrected; then you will surely be informed of what you did. And that, for Allah, is easy." (QS. At-Taghabun, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே." (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௭)
Jan Trust Foundation
(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; “அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!