Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௬

Qur'an Surah At-Taghabun Verse 6

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْٓا اَبَشَرٌ يَّهْدُوْنَنَاۖ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَى اللّٰهُ ۗوَاللّٰهُ غَنِيٌّ حَمِيْدٌ (التغابن : ٦٤)

dhālika bi-annahu
ذَٰلِكَ بِأَنَّهُۥ
That (is) because
அதற்கு காரணம் நிச்சயமாக
kānat tatīhim
كَانَت تَّأْتِيهِمْ
had come to them
அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர்
rusuluhum
رُسُلُهُم
their Messengers
அவர்களின் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
தெளிவான அத்தாட்சிகளுடன்
faqālū
فَقَالُوٓا۟
but they said
அவர்கள் கூறினார்கள்
abasharun
أَبَشَرٌ
"Shall human beings
மனிதர்களா?
yahdūnanā
يَهْدُونَنَا
guide us?"
எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்
fakafarū
فَكَفَرُوا۟
So they disbelieved
ஆகவே, அவர்கள் நிராகரித்தனர்
watawallaw
وَتَوَلَّوا۟ۚ
and turned away
இன்னும் விலகினார்கள்
wa-is'taghnā
وَّٱسْتَغْنَى
And can do without them
அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُۚ
Allah
அல்லாஹ்வும்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
(is) Self-sufficient
மகா செல்வந்தன்
ḥamīdun
حَمِيدٌ
Praiseworthy
மகா புகழுக்குரியவன்

Transliteration:

Zaalika bi annahoo kaanat taateehim Rusuluhum bilbaiyinaati faqaaloo a basharuny yahdoonanaa fakafaroo wa tawallaw; wastaghnal laah; wallaahu ghaniyyun hameed (QS. at-Taghābun:6)

English Sahih International:

That is because their messengers used to come to them with clear evidences, but they said, "Shall human beings guide us?" and disbelieved and turned away. And Allah dispensed [with them]; and Allah is Free of need and Praiseworthy. (QS. At-Taghabun, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ "(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?" என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்த வில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடைய வனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௬)

Jan Trust Foundation

இதற்குக் காரணம்| நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர்; ஆனால் அப்போது அவர்களோ| (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்?” என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன்; அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர், (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான். அல்லாஹ் மகா செல்வந்தன், மகா புகழுக்குரியவன்.