Skip to content

ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் - Page: 2

At-Taghabun

(at-Taghābun)

௧௧

مَآ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ ۗوَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ١١

mā aṣāba
مَآ أَصَابَ
ஏற்படாது
min muṣībatin
مِن مُّصِيبَةٍ
எந்த சோதனையும்
illā bi-idh'ni
إِلَّا بِإِذْنِ
அனுமதி இல்லாமல்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
waman yu'min
وَمَن يُؤْمِنۢ
யார் நம்பிக்கை கொள்வாரோ
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
yahdi
يَهْدِ
நேர்வழி காட்டுவான்
qalbahu
قَلْبَهُۥۚ
அவரின் உள்ளத்திற்கு
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௧)
Tafseer
௧௨

وَاَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَۚ فَاِنْ تَوَلَّيْتُمْ فَاِنَّمَا عَلٰى رَسُوْلِنَا الْبَلٰغُ الْمُبِيْنُ ١٢

wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
l-rasūla
ٱلرَّسُولَۚ
தூதருக்கு
fa-in tawallaytum fa-innamā ʿalā
فَإِن تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَىٰ
நீங்கள் விலகினால் /நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம்
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைப்பதுதான்
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவாக
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடங்கள். அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தால் (அது உங்களுக்குத்தான் நஷ்டம். ஏனென்றால்,) நம் தூதர் மீதுள்ள கடமையெல்லாம், அவர் தன்னுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதுதான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௨)
Tafseer
௧௩

اَللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١٣

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لَآ
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
கடவுள்
illā huwa
إِلَّا هُوَۚ
அவனைத் தவிர
waʿalā
وَعَلَى
மீதே
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதே பொறுப்பை ஒப்படையுங்கள். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௩)
Tafseer
௧௪

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ١٤

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
inna
إِنَّ
நிச்சயமாக
min azwājikum
مِنْ أَزْوَٰجِكُمْ
உங்கள் மனைவிகளிலும்
wa-awlādikum
وَأَوْلَٰدِكُمْ
உங்கள் பிள்ளைகளிலும்
ʿaduwwan
عَدُوًّا
எதிரிகள்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
fa-iḥ'dharūhum
فَٱحْذَرُوهُمْۚ
ஆகவே அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள்
wa-in taʿfū
وَإِن تَعْفُوا۟
நீங்கள் பிழை பொறுத்தால்
wataṣfaḥū
وَتَصْفَحُوا۟
இன்னும் புறக்கணித்தால்
wataghfirū
وَتَغْفِرُوا۟
நீங்கள் மன்னித்தால்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
மகா கருணையாளன்
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.) ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௪)
Tafseer
௧௫

اِنَّمَآ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۗوَاللّٰهُ عِنْدَهٗٓ اَجْرٌ عَظِيْمٌ ١٥

innamā amwālukum
إِنَّمَآ أَمْوَٰلُكُمْ
உங்கள் செல்வங்கள் எல்லாம்
wa-awlādukum
وَأَوْلَٰدُكُمْ
இன்னும் உங்கள் பிள்ளைகள்
fit'natun
فِتْنَةٌۚ
சோதனைதான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿindahu
عِندَهُۥٓ
அவனிடம்தான்
ajrun ʿaẓīmun
أَجْرٌ عَظِيمٌ
மகத்தான கூலி
உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது. ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௫)
Tafseer
௧௬

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا وَاَنْفِقُوْا خَيْرًا لِّاَنْفُسِكُمْۗ وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ١٦

fa-ittaqū
فَٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mā is'taṭaʿtum
مَا ٱسْتَطَعْتُمْ
உங்களுக்கு முடிந்தளவு
wa-is'maʿū
وَٱسْمَعُوا۟
இன்னும் செவி தாழ்த்துங்கள்
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்
wa-anfiqū
وَأَنفِقُوا۟
இன்னும் தர்மம் செய்யுங்கள்
khayran
خَيْرًا
செல்வத்தை
li-anfusikum
لِّأَنفُسِكُمْۗ
உங்கள் நன்மைக்காக
waman
وَمَن
எவர்(கள்)
yūqa
يُوقَ
பாதுகாக்கப்படுவார்(களோ)
shuḥḥa
شُحَّ
கஞ்சத் தனத்தில் இருந்து
nafsihi
نَفْسِهِۦ
தமது மனதின்
fa-ulāika humu
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-muf'liḥūna
ٱلْمُفْلِحُونَ
வெற்றியாளர்கள்
ஆதலால், உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௬)
Tafseer
௧௭

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ ١٧

in tuq'riḍū
إِن تُقْرِضُوا۟
நீங்கள் கடன் கொடுத்தால்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
qarḍan
قَرْضًا
கடனாக
ḥasanan
حَسَنًا
அழகிய
yuḍāʿif'hu
يُضَٰعِفْهُ
அதை பன்மடங்காகப் பெருக்குவான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
wayaghfir
وَيَغْفِرْ
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۚ
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
shakūrun
شَكُورٌ
மிகவும் நன்றியுள்ளவன்
ḥalīmun
حَلِيمٌ
மகா சகிப்பாளன்
அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௭)
Tafseer
௧௮

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الْحَكِيْمُ ࣖ ١٨

ʿālimu
عَٰلِمُ
நன்கறிந்தவன்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவற்றையும்
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
வெளிப்படையானவற்றையும்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௮)
Tafseer