Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஸ் ஸஃப்ஃபு வசனம் ௫

Qur'an Surah As-Saf Verse 5

ஸூரத்துஸ் ஸஃப்ஃபு [௬௧]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِيْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّيْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْۗ فَلَمَّا زَاغُوْٓا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْۗ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ (الصف : ٦١)

wa-idh qāla
وَإِذْ قَالَ
And when said
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
mūsā
مُوسَىٰ
Musa
மூஸா
liqawmihi
لِقَوْمِهِۦ
to his people
தனது மக்களுக்கு
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே!
lima tu'dhūnanī
لِمَ تُؤْذُونَنِى
Why do you hurt me
எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்?
waqad
وَقَد
while certainly
திட்டமாக
taʿlamūna
تَّعْلَمُونَ
you know
நீங்கள் அறிவீர்கள்
annī
أَنِّى
that I am
நிச்சயமாக நான்
rasūlu
رَسُولُ
(the) Messenger
தூதர்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
ilaykum
إِلَيْكُمْۖ
to you?"
உங்களுக்கு
falammā zāghū
فَلَمَّا زَاغُوٓا۟
Then when they deviated
அவர்கள் சருகிய போது
azāgha
أَزَاغَ
(was caused to) deviate
திருப்பிவிட்டான்
l-lahu
ٱللَّهُ
(by) Allah
அல்லாஹ்(வும்)
qulūbahum
قُلُوبَهُمْۚ
their hearts
அவர்களின் உள்ளங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people
மக்களை
l-fāsiqīna
ٱلْفَٰسِقِينَ
the defiantly disobedient
பாவிகளான

Transliteration:

Wa iz qaala Moosa liqawmihee yaa qawmi lima tu'zoonanee wa qat ta'lamoona annee Rasoolul laahi ilaikum falammaa zaaghooo azaaghal laahu quloobahum; wallaahu laa yahdil qawmal faasiqeen (QS. aṣ-Ṣaff:5)

English Sahih International:

And [mention, O Muhammad], when Moses said to his people, "O my people, why do you harm me while you certainly know that I am the messenger of Allah to you?" And when they deviated, Allah caused their hearts to deviate. And Allah does not guide the defiantly disobedient people. (QS. As-Saf, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

மூஸா தன் மக்களை நோக்கி "என்னுடைய மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகின்றீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே" என்று கூறியதை (நபியே! நீங்கள்) நினைத்துப் பாருங்கள். (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை. (ஸூரத்துஸ் ஸஃப்ஃபு, வசனம் ௫)

Jan Trust Foundation

மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்| “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மூஸா தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மக்களே! எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்பதை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். அவர்கள் (நேர்வழியில் இருந்து) சருகிய போது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை (நேர்வழியில் இருந்து) திருப்பிவிட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.