Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மும்தஹினா வசனம் ௧

Qur'an Surah Al-Mumtahanah Verse 1

ஸூரத்துல் மும்தஹினா [௬௦]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّيْ وَعَدُوَّكُمْ اَوْلِيَاۤءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَاۤءَكُمْ مِّنَ الْحَقِّۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْۗ اِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِيْ سَبِيْلِيْ وَابْتِغَاۤءَ مَرْضَاتِيْ تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَاَنَا۠ اَعْلَمُ بِمَآ اَخْفَيْتُمْ وَمَآ اَعْلَنْتُمْۗ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَاۤءَ السَّبِيْلِ (الممتحنة : ٦٠)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you! who! believe!
நம்பிக்கையாளர்களே!
lā tattakhidhū
لَا تَتَّخِذُوا۟
(Do) not take
எடுத்துக் கொள்ளாதீர்கள்
ʿaduwwī
عَدُوِّى
My enemies
எனதுஎதிரிகளை(யும்)
waʿaduwwakum
وَعَدُوَّكُمْ
and your enemies
உங்கள் எதிரிகளையும்
awliyāa
أَوْلِيَآءَ
(as) allies
உற்ற நண்பர்களாக
tul'qūna
تُلْقُونَ
offering
வெளிப்படுத்துகின்ற
ilayhim
إِلَيْهِم
them
அவர்களிடம்
bil-mawadati
بِٱلْمَوَدَّةِ
love
அன்பை
waqad
وَقَدْ
while
திட்டமாக
kafarū
كَفَرُوا۟
they have disbelieved
நிராகரித்தனர்
bimā jāakum
بِمَا جَآءَكُم
in what came to you
உங்களிடம் வந்ததை
mina l-ḥaqi
مِّنَ ٱلْحَقِّ
of the truth
சத்தியத்தை
yukh'rijūna
يُخْرِجُونَ
driving out
வெளியேற்றுகின்றனர்
l-rasūla
ٱلرَّسُولَ
the Messenger
தூதரை(யும்)
wa-iyyākum
وَإِيَّاكُمْۙ
and yourselves
உங்களையும்
an tu'minū
أَن تُؤْمِنُوا۟
because you believe
நீங்கள் நம்பிக்கை கொண்டதனால்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
rabbikum
رَبِّكُمْ
your Lord
உங்கள் இறைவனாகிய
in kuntum kharajtum
إِن كُنتُمْ خَرَجْتُمْ
If you come forth
நீங்கள் வெளியேறிஇருந்தால்
jihādan
جِهَٰدًا
(to) strive
ஜிஹாது செய்வதற்காகவும்
fī sabīlī
فِى سَبِيلِى
in My way
எனது பாதையில்
wa-ib'tighāa
وَٱبْتِغَآءَ
and (to) seek
தேடியும்
marḍātī
مَرْضَاتِىۚ
My Pleasure
என் பொருத்தத்தை
tusirrūna
تُسِرُّونَ
You confide
இரகசியமாக காட்டுகின்றீர்களா?
ilayhim
إِلَيْهِم
to them
அவர்களிடம்
bil-mawadati
بِٱلْمَوَدَّةِ
love
அன்பை
wa-anā
وَأَنَا۠
but I Am
நான்
aʿlamu
أَعْلَمُ
most knowing
நன்கறிவேன்
bimā akhfaytum
بِمَآ أَخْفَيْتُمْ
of what you conceal
நீங்கள் மறைப்பதையும்
wamā aʿlantum
وَمَآ أَعْلَنتُمْۚ
and what you declare
நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும்
waman
وَمَن
And whoever
யார்
yafʿalhu
يَفْعَلْهُ
does it
அதைச் செய்வாரோ
minkum faqad
مِنكُمْ فَقَدْ
among you then certainly
உங்களில்/திட்டமாக
ḍalla
ضَلَّ
he has strayed
வழி கெட்டுவிட்டார்
sawāa l-sabīli
سَوَآءَ ٱلسَّبِيلِ
(from the) straight path
நேரான பாதையை

Transliteration:

Yaa ayyuhal lazeena aamanoo laa tattakhizoo 'aduwwee wa 'aduwaakum awliyaaa'a tulqoona ilaihim bilmawaddati wa qad kafaroo bima jaaa'akum minal haqq, yukhrijoonar Rasoola wa iyyaakum an tu'minoo billaahi rabbikum in kuntum kharajtum jihaadan fee sabeelee wabtighaaa'a mardaatee; tusirroona ilaihim bilma waddati wa ana a'alamu bimaaa akhfaitum wa maaa a'lantum; wa many yaf'alhu minkum faqad dalla sawaaa'as sabeel (QS. al-Mumtaḥanah:1)

English Sahih International:

O you who have believed, do not take My enemies and your enemies as allies, extending to them affection while they have disbelieved in what came to you of the truth, having driven out the Prophet and yourselves [only] because you believe in Allah, your Lord. If you have come out for jihad [i.e., fighting or striving] in My cause and seeking means to My approval, [take them not as friends]. You confide to them affection [i.e., instruction], but I am most knowing of what you have concealed and what you have declared. And whoever does it among you has certainly strayed from the soundness of the way. (QS. Al-Mumtahanah, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக்கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்முடைய) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்) என்னுடைய திருப்பொருத்தத்தை விரும்பி, என்னுடைய பாதையில் போர்புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறி யிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார். (ஸூரத்துல் மும்தஹினா, வசனம் ௧)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! எனது எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துகின்ற (உங்கள்) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் வந்த சத்தியத்தை அவர்கள் திட்டமாக நிராகரித்தனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் தூதரையும் உங்களையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) அவர்கள் வெளியேற்றுகின்றனர். நீங்கள் எனது பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும் என் பொருத்தத்தை தேடியும் வெளியேறி இருந்தால் (அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!). அவர்களிடம் இரகசியமாக அன்பை காட்டுகின்றீர்களா? நீங்கள் மறைப்பதையும் நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். உங்களில் யார் அதைச் செய்வாரோ (-அல்லாஹ்வின் எதிரிகளை தனது நண்பர்களாக எடுத்துக் கொள்வாரோ) திட்டமாக அவர் நேரான பாதையை விட்டு வழி கெட்டுவிட்டார்.