Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௫

Qur'an Surah Al-An'am Verse 145

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّآ اَجِدُ فِيْ مَآ اُوْحِيَ اِلَيَّ مُحَرَّمًا عَلٰى طَاعِمٍ يَّطْعَمُهٗٓ اِلَّآ اَنْ يَّكُوْنَ مَيْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِيْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَيْرِ اللّٰهِ بِهٖۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ (الأنعام : ٦)

qul
قُل
Say
கூறுவீராக
lā ajidu
لَّآ أَجِدُ
"Not "(do) I find
நான் காணவில்லை
fī mā ūḥiya
فِى مَآ أُوحِىَ
in what has been revealed
எதில்/வஹீ அறிவிக்கப்பட்டது
ilayya
إِلَىَّ
to me
என் பக்கம்
muḥarraman
مُحَرَّمًا
(anything) forbidden
தடுக்கப்பட்டதாக
ʿalā ṭāʿimin
عَلَىٰ طَاعِمٍ
to an eater
புசிப்பவர் மீது
yaṭʿamuhu
يَطْعَمُهُۥٓ
who eats it
அதை புசிப்பார்
illā
إِلَّآ
except
தவிர
an yakūna
أَن يَكُونَ
that it be
இருப்பது
maytatan
مَيْتَةً
dead
செத்ததாக
aw
أَوْ
or
அல்லது
daman
دَمًا
blood
இரத்தமாக
masfūḥan
مَّسْفُوحًا
poured forth
ஓடக்கூடியது
aw
أَوْ
or
அல்லது
laḥma
لَحْمَ
(the) flesh
மாமிசமாக
khinzīrin
خِنزِيرٍ
(of) swine
பன்றியின்
fa-innahu
فَإِنَّهُۥ
for indeed, it
ஏனெனில் நிச்சயமாக அது
rij'sun
رِجْسٌ
(is) filth
அசுத்தம்
aw fis'qan
أَوْ فِسْقًا
or (it be) disobedience
அல்லது/பாவமாக
uhilla
أُهِلَّ
[is] dedicated
பெயர் கூறப்பட்டது
lighayri
لِغَيْرِ
to other than
அல்லாதவருக்கு
l-lahi
ٱللَّهِ
Allah
அல்லாஹ்
bihi
بِهِۦۚ
[on it]
அதைக் கொண்டு
famani
فَمَنِ
But whoever
எவர்
uḍ'ṭurra
ٱضْطُرَّ
(is) compelled
நிர்ப்பந்திக்கப்பட்டார்
ghayra bāghin
غَيْرَ بَاغٍ
not desiring
நாடாதவராக
walā ʿādin
وَلَا عَادٍ
and not transgressing
வரம்பு மீறாதவராக
fa-inna rabbaka
فَإِنَّ رَبَّكَ
then indeed your Lord
நிச்சயமாக உம் இறைவன்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful"
பெரும் கருணையாளன்

Transliteration:

Qul laaa ajidu fee maaa oohiya ilaiya muharraman 'alaa taa'iminy yat'amuhooo illaaa ai yakoona maitatan aw damam masfoohan aw lahma khinzeerin fa innahoo rijsun aw fisqan uhilla lighairil laahi bih; famanid turra ghaira baa ghinw wa laa 'aadin fa inna Rabbaka Ghafoorur Raheem (QS. al-ʾAnʿām:145)

English Sahih International:

Say, "I do not find within that which was revealed to me [anything] forbidden to one who would eat it unless it be a dead animal or blood spilled out or the flesh of swine – for indeed, it is impure – or it be [that slaughtered in] disobedience, dedicated to other than Allah. But whoever is forced [by necessity], neither desiring [it] nor transgressing [its limit], then indeed, your Lord is Forgiving and Merciful." (QS. Al-An'am, Ayah ௧௪௫)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீல் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.)" தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவைகளை புசித்து) விட்டால் (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௫)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை” - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: "புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் (எதையும்) காணவில்லை. (ஆனால்) செத்ததாக அல்லது ஓடக்கூடிய இரத்தமாக, பன்றியின் மாமிசமாக -ஏனெனில் நிச்சயமாக அது அசுத்தமானதாகும்- அல்லது பாவமாக அல்லாஹ் அல்லாதவருக்குப் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக’இருந்தால் தவிர (இவை தடுக்கப்பட்டவையாகும்). பாவத்தை நாடாதவராக, வரம்பு மீறாதவராக எவர் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.