Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௮

Qur'an Surah Al-An'am Verse 138

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْا هٰذِهٖٓ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ لَّا يَطْعَمُهَآ اِلَّا مَنْ نَّشَاۤءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَاۤءً عَلَيْهِۗ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ (الأنعام : ٦)

waqālū
وَقَالُوا۟
And they say
கூறினர்
hādhihi
هَٰذِهِۦٓ
"These
இவை
anʿāmun
أَنْعَٰمٌ
cattle
கால்நடைகள்
waḥarthun
وَحَرْثٌ
and crops
இன்னும் விவசாயம்
ḥij'run
حِجْرٌ
(are) forbidden
தடுக்கப்பட்டவை
lā yaṭʿamuhā
لَّا يَطْعَمُهَآ
no (one) can eat them
புசிக்கமாட்டார்/அவற்றை
illā
إِلَّا
except
தவிர
man
مَن
whom
எவர்
nashāu
نَّشَآءُ
we will"
நாடுகிறோம்
bizaʿmihim
بِزَعْمِهِمْ
by their claim
தங்கள் எண்ணப்படி
wa-anʿāmun
وَأَنْعَٰمٌ
And cattle
இன்னும் கால்நடைகள்
ḥurrimat
حُرِّمَتْ
forbidden
தடுக்கப்பட்டன
ẓuhūruhā
ظُهُورُهَا
(are) their backs
அவற்றின் முதுகுகள்
wa-anʿāmun
وَأَنْعَٰمٌ
and cattle
இன்னும் கால்நடைகள்
lā yadhkurūna
لَّا يَذْكُرُونَ
not they mention
கூறமாட்டார்கள்
is'ma l-lahi
ٱسْمَ ٱللَّهِ
(the) name (of) Allah
அல்லாஹ்வின் பெயரை
ʿalayhā
عَلَيْهَا
on it
அவற்றின் மீது
if'tirāan
ٱفْتِرَآءً
(as) an invention
இட்டுக்கட்டுகின்றனர்
ʿalayhi
عَلَيْهِۚ
against Him
அவன் மீது
sayajzīhim
سَيَجْزِيهِم
He will recompense them
கூலி கொடுப்பான்/அவர்களுக்கு
bimā
بِمَا
for what
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
they used to
இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
invent
இட்டுக்கட்டுகின்றனர்

Transliteration:

Wa qaaloo haaziheee an'aamunw wa harsun hijrun laa yat'amuhaaa illaa man nashaaa'u biza'mihim wa an'aamun hurrimat zuhooruhaa wa an'aamul laa yazkuroonas mal laahi 'alaihaf tiraaa'an 'alaih; sa yajzeehim bimaa kaanoo yaftaroon (QS. al-ʾAnʿām:138)

English Sahih International:

And they say, "These animals and crops are forbidden; no one may eat from them except whom we will," by their claim. And there are those [camels] whose backs are forbidden [by them] and those upon which the name of Allah is not mentioned – [all of this] an invention of untruth about Him. He will punish them for what they were inventing. (QS. Al-An'am, Ayah ௧௩௮)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவர்கள் தங்கள்) ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு) "இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி நாங்கள் விரும்புகிற (புரோகிதர் ஆகிய)வர்களைத் தவிர (மற்றெவரும்) அதனைப் புசிக்கக்கூடாது" என்று (தங்கள் மூடக் கொள்கையின்படி) அவர்கள் கூறுகின்றனர். தவிர, அவ்வாறே வேறு சில) ஆடு, மாடு, ஒட்டகங்களின் முதுகுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. (அவற்றின் மீது ஏறுவதும், சுமையேற்றுவதும் கூடாது) என்றும், (வேறு) சில ஆடு, மாடு, ஒட்டகங்களை(க் குறிப்பிட்டு அவற்றை அறுக்கும்பொழுது) அவற்றின் மீது அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறக்கூடாது என்றும் (அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதாக) அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்(து கூறு)கின்றனர். அவர்களுடைய இப்பொய்க் கூற்றுக்குத் தக்க கூலியை (இறைவன்) பின்னர் அவர்களுக்குக் கொடுப்பான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௮)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (மற்றவர்) அவற்றைப் புசிக்கமாட்டார் என்று தங்கள் எண்ணப்படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள் (இவ்வாறு அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது இட்டுக் கட்டுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.