Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௯

Qur'an Surah Al-An'am Verse 109

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَىِٕنْ جَاۤءَتْهُمْ اٰيَةٌ لَّيُؤْمِنُنَّ بِهَاۗ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ وَمَا يُشْعِرُكُمْ اَنَّهَآ اِذَا جَاۤءَتْ لَا يُؤْمِنُوْنَ (الأنعام : ٦)

wa-aqsamū
وَأَقْسَمُوا۟
And they swear
சத்தியம் செய்தனர்
bil-lahi
بِٱللَّهِ
by Allah
அல்லாஹ்வைக் கொண்டு
jahda
جَهْدَ
strongest
உறுதியாக
aymānihim
أَيْمَٰنِهِمْ
(of) their oaths
அவர்களின் சத்தியம்
la-in jāathum
لَئِن جَآءَتْهُمْ
that if came to them
வந்தால்/அவர்களிடம்
āyatun
ءَايَةٌ
a sign
ஓர் அத்தாட்சி
layu'minunna
لَّيُؤْمِنُنَّ
they would surely believe
நிச்சயமாக நம்பிக்கை கொள்வார்கள்
bihā
بِهَاۚ
in it
அதை
qul
قُلْ
Say
கூறுவீராக
innamā l-āyātu
إِنَّمَا ٱلْءَايَٰتُ
"Only the signs
எல்லாம்/அத்தாட்சிகள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِۖ
(are) with Allah"
அல்லாஹ்விடமே
wamā yush'ʿirukum
وَمَا يُشْعِرُكُمْ
And what will make you perceive
நீங்கள் அறிவீர்களா?
annahā
أَنَّهَآ
that [it]
நிச்சயமாக அவை
idhā jāat
إِذَا جَآءَتْ
when it comes
வந்தால்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
not they will believe
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Wa aqsamoo billaahi jahda aimaanihim la'in jaaa'at hum Aayatul la yu'minunna bihaa; qul innamal Aayaatu 'indal laahi wa maa yush'irukum annahaaa izaa jaaa'at laa yu'minoon (QS. al-ʾAnʿām:109)

English Sahih International:

And they swear by Allah their strongest oaths that if a sign came to them, they would surely believe in it. Say, "The signs are only with [i.e., from] Allah." And what will make you perceive that even if it [i.e., a sign] came, they would not believe. (QS. Al-An'am, Ayah ௧௦௯)

Abdul Hameed Baqavi:

(அவர்கள் விருப்பப்படி) யாதொரு அத்தாட்சி தங்களுக்காக வரும் சமயத்தில், "நிச்சயமாக நாங்கள் அதனை நம்புவோம்" என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகின்றனர். (அதற்கு நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "நிச்சயமாக அத்தாட்சிகள் அனைத்தும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. (அவற்றை அவன் விரும்பியவாறே வெளியாக்குவான். நீங்கள் விரும்புவது போன்றல்ல) என்று கூறுங்கள். (அவ்வாறு) அவர்களிடம் (அவர்கள் விரும்பியவாறே) வரும் சமயத்திலும் அதனை அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா? (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௯)

Jan Trust Foundation

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்கள், அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து, தங்களுக்கு ஓர் அத்தாட்சி வந்துவிடுமானால் தாம் நிச்சயமாக அதைக் கொண்டு ஈமான் கொள்வதாக கூறுகிறார்கள். (நபியே!) அவர்களிடம்) நீர் கூறும்| அத்தாட்சிகள் யாவும் அல்லாஹ்விடமே இருக்கின்றன. அந்த அத்தாட்சிகள் வரும்பொழுது நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என்பதை உங்களுக்கு எது அறிவித்தது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், "நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்" என அவர்கள் அல்லாஹ்வைக் கொண்டு உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன." என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்பதை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அறிவீர்களா?