Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௭

Qur'an Surah Al-Hadid Verse 27

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ قَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّيْنَا بِعِيْسَى ابْنِ مَرْيَمَ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ ەۙ وَجَعَلْنَا فِيْ قُلُوْبِ الَّذِيْنَ اتَّبَعُوْهُ رَأْفَةً وَّرَحْمَةً ۗوَرَهْبَانِيَّةَ ِۨابْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَيْهِمْ اِلَّا ابْتِغَاۤءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَايَتِهَا ۚفَاٰتَيْنَا الَّذِيْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ (الحديد : ٥٧)

thumma qaffaynā
ثُمَّ قَفَّيْنَا
Then We sent
பிறகு/தொடர்ந்து அனுப்பினோம்
ʿalā āthārihim
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
on their footsteps
அவர்களின் அடிச்சுவடுகளில்
birusulinā
بِرُسُلِنَا
Our Messengers
நமது தூதர்களை
waqaffaynā
وَقَفَّيْنَا
and We followed
நாம் பின்னால் அனுப்பினோம்
biʿīsā
بِعِيسَى
with Isa
ஈஸாவை
ib'ni maryama
ٱبْنِ مَرْيَمَ
son (of) Maryam
மர்யமுடைய மகன்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
and We gave him
அவருக்கு கொடுத்தோம்
l-injīla
ٱلْإِنجِيلَ
the Injeel
இன்ஜீலை
wajaʿalnā
وَجَعَلْنَا
And We placed
ஏற்படுத்தினோம்
fī qulūbi
فِى قُلُوبِ
in (the) hearts
உள்ளங்களில்
alladhīna ittabaʿūhu
ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ
(of) those who followed him
எவர்கள்/அவரைப் பின்பற்றினார்கள்
rafatan
رَأْفَةً
compassion
இரக்கத்தை(யும்)
waraḥmatan
وَرَحْمَةً
and mercy
கருணையையும்
warahbāniyyatan
وَرَهْبَانِيَّةً
But monasticism
இன்னும் துறவரத்தை
ib'tadaʿūhā
ٱبْتَدَعُوهَا
they innovated -
புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர்/அதை
mā katabnāhā
مَا كَتَبْنَٰهَا
not We prescribed it
நாம் அதை கடமையாக்கவில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
for them -
அவர்கள் மீது
illā ib'tighāa
إِلَّا ٱبْتِغَآءَ
only seeking
நாடியே தவிர
riḍ'wāni
رِضْوَٰنِ
(the) pleasure
பொருத்தத்தை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
famā raʿawhā
فَمَا رَعَوْهَا
but not they observed it
ஆனால் அதை அவர்கள் பேணவில்லை
ḥaqqa riʿāyatihā
حَقَّ رِعَايَتِهَاۖ
(with) right observance
அதை பேணவேண்டிய முறையில்
faātaynā
فَـَٔاتَيْنَا
So We gave
கொடுப்போம்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
believed
நம்பிக்கை கொள்வார்களோ
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில் இருந்து
ajrahum
أَجْرَهُمْۖ
their reward
அவர்களின் கூலியை
wakathīrun
وَكَثِيرٌ
but most
இன்னும் அதிகமானவர்கள்
min'hum
مِّنْهُمْ
of them
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
(are) defiantly disobediently
பாவிகள்

Transliteration:

Summa qaffainaa 'alaa aasaarihim bi Rusulinaa wa qaffainaa be 'Eesab ni Maryama wa aatainaahul Injeela wa ja'alnaa fee quloobil lazeenat taba' oohu raafatanw wa rahmatanw wa rahbaaniyyatanib tada' oohaa maa katanaahaa 'alaihim illab tighaaa'a ridwaanil laahi famaa ra'awhaa haqqa ri'aayatihaa fa aatainal lazeena aamanoo minhum ajrahum wa kaseerum minhum faasiqoon (QS. al-Ḥadīd:27)

English Sahih International:

Then We sent following their footsteps [i.e., traditions] Our messengers and followed [them] with Jesus, the son of Mary, and gave him the Gospel. And We placed in the hearts of those who followed him compassion and mercy and monasticism, which they innovated; We did not prescribe it for them except [that they did so] seeking the approval of Allah. But they did not observe it with due observance. So We gave the ones who believed among them their reward, but many of them are defiantly disobedient. (QS. Al-Hadid, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய) தூதர் பலரை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பி வைத்தோம். இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கிருபையையும் இரக்கத்தையும் உண்டுபண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதனை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்க வில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உங்களை) நம்பிக்கை கொள்கின்றார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (உங்களை நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௭)

Jan Trust Foundation

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேனவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இஸ்ரவேலர்களில் இறுதியாக) மர்யமுடைய மகன் ஈசாவை நாம் பின்னால் அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவரத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால் அதை (-அந்த துறவறத்தை) அதை பேணவேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்கு கொடுப்போம். அவர்களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்.