Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௩

Qur'an Surah Al-Hadid Verse 23

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لِّكَيْلَا تَأْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَآ اٰتٰىكُمْ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۙ (الحديد : ٥٧)

likaylā tasaw
لِّكَيْلَا تَأْسَوْا۟
So that you may not grieve
ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)
ʿalā mā fātakum
عَلَىٰ مَا فَاتَكُمْ
over what has escaped you
உங்களுக்கு தவறி விட்டதற்காக
walā tafraḥū
وَلَا تَفْرَحُوا۟
and (do) not exult
நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்
bimā ātākum wal-lahu
بِمَآ ءَاتَىٰكُمْۗ وَٱللَّهُ
at what He has given you And Allah
அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்
lā yuḥibbu
لَا يُحِبُّ
(does) not love
நேசிக்க மாட்டான்
kulla
كُلَّ
every
எல்லோரையும்
mukh'tālin
مُخْتَالٍ
self-deluded
அகம்பாவக்காரர்கள்
fakhūrin
فَخُورٍ
boaster
பெருமையடிப்பவர்கள்

Transliteration:

Likailaa taasaw 'alaa maa faatakum wa laa tafrahoo bimaaa aataakum; wallaahu laa yuhibbu kulla mukhtaalin fakhoor (QS. al-Ḥadīd:23)

English Sahih International:

In order that you not despair over what has eluded you and not exult [in pride] over what He has given you. And Allah does not like everyone self-deluded and boastful – (QS. Al-Hadid, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௩)

Jan Trust Foundation

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். அல்லாஹ் அகம்பாவக்காரர்கள், பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் நேசிக்க மாட்டான்.