Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௪

Qur'an Surah Al-Hadid Verse 14

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْۗ قَالُوْا بَلٰى وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِيُّ حَتّٰى جَاۤءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ (الحديد : ٥٧)

yunādūnahum
يُنَادُونَهُمْ
They will call them
அவர்களை கூவி அழைப்பார்கள்
alam nakun
أَلَمْ نَكُن
"Were not we
நாங்கள் இருக்கவில்லையா?
maʿakum
مَّعَكُمْۖ
with you?"
உங்களுடன்
qālū
قَالُوا۟
They will say
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
"Yes
ஏன் இல்லை
walākinnakum
وَلَٰكِنَّكُمْ
but you
என்றாலும் நீங்கள்
fatantum
فَتَنتُمْ
led to temptation
அழித்துக் கொண்டீர்கள்
anfusakum
أَنفُسَكُمْ
yourselves
உங்களையே
watarabbaṣtum
وَتَرَبَّصْتُمْ
and you awaited
இன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள்
wa-ir'tabtum
وَٱرْتَبْتُمْ
and you doubted
இன்னும் சந்தேகித்தீர்கள்
wagharratkumu
وَغَرَّتْكُمُ
and deceived you
உங்களை மயக்கின
l-amāniyu
ٱلْأَمَانِىُّ
the wishful thinking
பொய்யானஆசைகள்
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
jāa
جَآءَ
came
வந்துவிட்டது
amru
أَمْرُ
(the) Command
கட்டளை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wagharrakum
وَغَرَّكُم
And deceived you
உங்களை மயக்கிவிட்டான்
bil-lahi
بِٱللَّهِ
about Allah
அல்லாஹ்வை விட்டும்
l-gharūru
ٱلْغَرُورُ
the deceiver
மயக்கக் கூடியவன்

Transliteration:

Yunaadoonahum alam nakum ma'akum qaaloo balaa wa laakinnakum fatantum anfusakum wa tarabbastum wartabtum wa gharratkumul amaaniyyu hatta jaaa'a amrul laahi wa gharrakum billaahil gharoor (QS. al-Ḥadīd:14)

English Sahih International:

They [i.e., the hypocrites] will call to them [i.e., the believers], "Were we not with you?" They will say, "Yes, but you afflicted yourselves and awaited [misfortune for us] and doubted, and wishful thinking deluded you until there came the command of Allah. And the Deceiver [i.e., Satan] deceived you concerning Allah. (QS. Al-Hadid, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி "உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்கவில்லையா?" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். அன்றி, (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரையில், உங்களுடைய பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௧௪)

Jan Trust Foundation

இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா? என்று அவர்களை (நம்பிக்கையாளர்களை) கூவி அழைப்பார்கள். அவர்கள் கூறுவார்கள். ஏன் இல்லை. என்றாலும் நீங்கள் (-நயவஞ்கசர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) தீமையை எதிர்பார்த்தீர்கள்; (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.