Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௩

Qur'an Surah Al-Hadid Verse 13

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْۚ قِيْلَ ارْجِعُوْا وَرَاۤءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاۗ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌۗ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُۗ (الحديد : ٥٧)

yawma
يَوْمَ
(On the) Day
அந்நாளில்
yaqūlu
يَقُولُ
will say
கூறுவார்கள்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
the hypocrite men
நயவஞ்சகம் உடைய ஆண்களும்
wal-munāfiqātu
وَٱلْمُنَٰفِقَٰتُ
and the hypocrite women
நயவஞ்சகம் உடைய பெண்களும்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
to those who believed
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
unẓurūnā
ٱنظُرُونَا
"Wait for us
எங்களை எதிர்பாருங்கள்!
naqtabis
نَقْتَبِسْ
we may acquire
நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்
min nūrikum
مِن نُّورِكُمْ
of your light"
உங்கள்ஒளியிலிருந்து
qīla
قِيلَ
It will be said
கூறப்படும்
ir'jiʿū
ٱرْجِعُوا۟
"Go back
நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்
warāakum
وَرَآءَكُمْ
behind you
உங்களுக்குப் பின்னால்
fal-tamisū
فَٱلْتَمِسُوا۟
and seek
தேடுங்கள்!
nūran
نُورًا
light"
ஒளியை
faḍuriba
فَضُرِبَ
Then will be put up
ஆகவே அமைக்கப்படும்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கு மத்தியில்
bisūrin
بِسُورٍ
a wall
ஒரு சுவர்
lahu
لَّهُۥ
for it
அதற்கு
bābun
بَابٌۢ
a gate
ஒரு வாசல்
bāṭinuhu
بَاطِنُهُۥ
its interior
அதன் உள் பக்கம்
fīhi
فِيهِ
in it
அதில்
l-raḥmatu
ٱلرَّحْمَةُ
(is) mercy
அருள்
waẓāhiruhu
وَظَٰهِرُهُۥ
but its exterior
இன்னும் அதன் வெளிப்பக்கம்
min qibalihi
مِن قِبَلِهِ
facing towards [it] facing towards [it]
அதற்கு முன்னால்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
the punishment
வேதனை

Transliteration:

Yawma yaqoolul munaa fiqoona walmunaafiqaatu lillazeena aamanun zuroonaa naqtabis min noorikum qeelarji'oo waraaa'akum faltamisoo nooran faduriba bainahum bisooril lahoo baab, baatinuhoo feehir rahmatu wa zaahiruhoo min qibalihi-'azaab (QS. al-Ḥadīd:13)

English Sahih International:

On the [same] Day the hypocrite men and hypocrite women will say to those who believed, "Wait for us that we may acquire some of your light." It will be said, "Go back behind you and seek light." And a wall will be placed between them with a door, its interior containing mercy, but on the outside of it is torment. (QS. Al-Hadid, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௧௩)

Jan Trust Foundation

முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி| “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்| “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும் நயவஞ்சகம் உடைய பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) எதிர்பாருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம் அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம் அதற்கு முன்னால் வேதனை இருக்கும்.