Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௨௮

Qur'an Surah Al-Qamar Verse 28

ஸூரத்துல் கமர் [௫௪]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنَبِّئْهُمْ اَنَّ الْمَاۤءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ (القمر : ٥٤)

wanabbi'hum
وَنَبِّئْهُمْ
And inform them
அவர்களுக்கு அறிவிப்பீராக
anna l-māa
أَنَّ ٱلْمَآءَ
that the water
நிச்சயமாக தண்ணீர்
qis'matun
قِسْمَةٌۢ
(is) to be shared
பங்காகும்
baynahum
بَيْنَهُمْۖ
between them
அவர்களுக்கு மத்தியில்
kullu shir'bin
كُلُّ شِرْبٍ
each drink
எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற
muḥ'taḍarun
مُّحْتَضَرٌ
attended
ஆஜராக வேண்டும்

Transliteration:

Wa nabbi'hum annal maaa'a qismatum bainahum kullu shirbim muhtadar (QS. al-Q̈amar:28)

English Sahih International:

And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn]. (QS. Al-Qamar, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்). (ஸூரத்துல் கமர், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக தண்ணீர் (ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும் என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிக்கப்படுகின்ற எல்லா நேரங்களிலும் (அந்த அந்த நேரத்திற்குரியவர்கள்) ஆஜராக வேண்டும்.