Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 2

An-Najm

(an-Najm)

௧௧

مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَاٰى ١١

mā kadhaba
مَا كَذَبَ
பொய்ப்பிக்கவில்லை
l-fuādu
ٱلْفُؤَادُ
உள்ளம்
mā raā
مَا رَأَىٰٓ
எதை பார்த்தாரோ
(நபியுடைய) உள்ளம், தான் கண்டதைப் பற்றிப் பொய் கூறவில்லை. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௧)
Tafseer
௧௨

اَفَتُمٰرُوْنَهٗ عَلٰى مَا يَرٰى ١٢

afatumārūnahu
أَفَتُمَٰرُونَهُۥ
அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
ʿalā mā yarā
عَلَىٰ مَا يَرَىٰ
அவர் பார்த்ததில்
அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கின்றீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௨)
Tafseer
௧௩

وَلَقَدْ رَاٰهُ نَزْلَةً اُخْرٰىۙ ١٣

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
raāhu
رَءَاهُ
அவர் அவரைப் பார்த்தார்
nazlatan ukh'rā
نَزْلَةً أُخْرَىٰ
மற்றொரு முறை
நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கின்றார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௩)
Tafseer
௧௪

عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهٰى ١٤

ʿinda sid'rati l-muntahā
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
சித்ரத்துல் முன்தஹா என்ற இடத்தில்
"ஸித்ரத்துல் முன்தஹா" என்னும் (இலந்தை) மரத்தின் சமீபத்தில். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௪)
Tafseer
௧௫

عِنْدَهَا جَنَّةُ الْمَأْوٰىۗ ١٥

ʿindahā
عِندَهَا
அங்குதான் இருக்கின்றது
jannatu l-mawā
جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
சொர்க்கம்/அல்மஃவா
அதன் சமீபத்தில்தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௫)
Tafseer
௧௬

اِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشٰىۙ ١٦

idh yaghshā
إِذْ يَغْشَى
சூழ்ந்து கொள்ளும்போது
l-sid'rata
ٱلسِّدْرَةَ
அந்த சித்ராவை
mā yaghshā
مَا يَغْشَىٰ
எது சூழ்ந்து கொள்ளுமோ அது
அந்த மரத்தை மூடியிருந்தவை அதனை முற்றிலும் மூடிக்கொண்டன. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௬)
Tafseer
௧௭

مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغٰى ١٧

mā zāgha
مَا زَاغَ
சாயவில்லை
l-baṣaru
ٱلْبَصَرُ
பார்வை
wamā ṭaghā
وَمَا طَغَىٰ
மீறவுமில்லை
(அதிலிருந்து அவருடைய) பார்வை விலகவும் இல்லை; கடக்கவும் இல்லை! ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௭)
Tafseer
௧௮

لَقَدْ رَاٰى مِنْ اٰيٰتِ رَبِّهِ الْكُبْرٰى ١٨

laqad raā
لَقَدْ رَأَىٰ
திட்டவட்டமாக பார்த்தார்
min āyāti
مِنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில்
rabbihi
رَبِّهِ
தனது இறைவனின்
l-kub'rā
ٱلْكُبْرَىٰٓ
பெரிய
அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளை யெல்லாம் மெய்யாகவே கண்டார். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௮)
Tafseer
௧௯

اَفَرَءَيْتُمُ اللّٰتَ وَالْعُزّٰى ١٩

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
நீங்கள் அறிவியுங்கள்!
l-lāta
ٱللَّٰتَ
லாத்
wal-ʿuzā
وَٱلْعُزَّىٰ
இன்னும் உஸ்ஸா
(நீங்கள் ஆராதனை செய்யும்) லாத், உஜ்ஜா (என்னும் சிலை)களை நீங்கள் கவனித்தீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௧௯)
Tafseer
௨௦

وَمَنٰوةَ الثَّالِثَةَ الْاُخْرٰى ٢٠

wamanata
وَمَنَوٰةَ
இன்னும் மனாத்தைப் பற்றி
l-thālithata
ٱلثَّالِثَةَ
மூன்றாவது
l-ukh'rā
ٱلْأُخْرَىٰٓ
மற்றொரு
மற்றொரு மூன்றாவது மனாத் (என்னும் சிலையைப்) பற்றியும் நீங்கள் சிந்தித்தீர்களா? (அவைகளுக்கு) ஏதேனும் இத்தகைய சக்தி உண்டா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௦)
Tafseer