Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௮௯

Qur'an Surah Al-Ma'idah Verse 89

ஸூரத்துல் மாயிதா [௫]: ௮௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِيْٓ اَيْمَانِكُمْ وَلٰكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا عَقَّدْتُّمُ الْاَيْمَانَۚ فَكَفَّارَتُهٗٓ اِطْعَامُ عَشَرَةِ مَسٰكِيْنَ مِنْ اَوْسَطِ مَا تُطْعِمُوْنَ اَهْلِيْكُمْ اَوْ كِسْوَتُهُمْ اَوْ تَحْرِيْرُ رَقَبَةٍ ۗفَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ ثَلٰثَةِ اَيَّامٍ ۗذٰلِكَ كَفَّارَةُ اَيْمَانِكُمْ اِذَا حَلَفْتُمْ ۗوَاحْفَظُوْٓا اَيْمَانَكُمْ ۗ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ (المائدة : ٥)

lā yuākhidhukumu
لَا يُؤَاخِذُكُمُ
Not will call you to account
தண்டிக்கமாட்டான் / உங்களை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bil-laghwi
بِٱللَّغْوِ
for the thoughtless utterances
வீணானதற்காக
fī aymānikum
فِىٓ أَيْمَٰنِكُمْ
in your oaths
சத்தியங்களில்/உங்கள்
walākin yuākhidhukum
وَلَٰكِن يُؤَاخِذُكُم
but He will call you to account
எனினும்/உங்களைத் தண்டிப்பான்
bimā
بِمَا
for what
எதற்காக
ʿaqqadttumu
عَقَّدتُّمُ
you contracted
உறுதிப்படுத்தினீர்கள்
l-aymāna
ٱلْأَيْمَٰنَۖ
(of) the oath
சத்தியங்களை
fakaffāratuhu
فَكَفَّٰرَتُهُۥٓ
So its expiation
அதற்குப் பரிகாரம்
iṭ'ʿāmu
إِطْعَامُ
(is) feeding
உணவளிப்பது
ʿasharati
عَشَرَةِ
(of) ten
பத்து
masākīna
مَسَٰكِينَ
needy people
ஏழைகளுக்கு
min
مِنْ
of
இருந்து
awsaṭi
أَوْسَطِ
average
நடுத்தரமானது
mā tuṭ'ʿimūna
مَا تُطْعِمُونَ
(of) what you feed
எது/ உணவளிக்கிறீர்கள்
ahlīkum
أَهْلِيكُمْ
your families
உங்கள் குடும்பத்திற்கு
aw
أَوْ
or
அல்லது
kis'watuhum
كِسْوَتُهُمْ
clothing them
அவர்களுக்கு ஆடையளிப்பது
aw
أَوْ
or
அல்லது
taḥrīru
تَحْرِيرُ
freeing
விடுதலையிடுவது
raqabatin
رَقَبَةٍۖ
a slave
ஓர் அடிமை
faman
فَمَن
But whoever
எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
(does) not find
பெறவில்லையெனில்
faṣiyāmu
فَصِيَامُ
(that), then fasting
நோன்பிருத்தல்
thalāthati
ثَلَٰثَةِ
(for) three
மூன்று
ayyāmin
أَيَّامٍۚ
days
நாட்களுக்கு
dhālika
ذَٰلِكَ
That
இது
kaffāratu
كَفَّٰرَةُ
(is the) expiation
பரிகாரம்
aymānikum
أَيْمَٰنِكُمْ
(of) your oaths
உங்கள் சத்தியங்களின்
idhā ḥalaftum
إِذَا حَلَفْتُمْۚ
when you have sworn
நீங்கள் சத்தியம் செய்தால்
wa-iḥ'faẓū
وَٱحْفَظُوٓا۟
And guard
காப்பாற்றுங்கள்
aymānakum
أَيْمَٰنَكُمْۚ
your oaths
உங்கள் சத்தியங்களை
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறு
yubayyinu
يُبَيِّنُ
makes clear
விவரிக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lakum
لَكُمْ
to you
உங்களுக்கு
āyātihi
ءَايَٰتِهِۦ
His Verses
தன் வசனங்களை
laʿallakum tashkurūna
لَعَلَّكُمْ تَشْكُرُونَ
so that you may (be) grateful
நீங்கள் நன்றி செலுத்துவதற்காக

Transliteration:

Laa yu'aakhizukumul laahu billaghwi feee aimaanikum wa laakiny ya'aakhizukum bimaa 'aqqattumul aimaana fakaf faaratuhooo it'aamu 'asharati masaakeena min awsati maa tut'imoona ahleekum aw kiswatuhum aw tahreeru raqabatin famallam yajid fa Siyaamu salaasati aiyaam; zaalika kaffaaratu aimaanikum izaa halaftum; wahfazooo aimaanakum; kazaalika yubaiyinul laahu lakum Aayaatihee la'allakum tashkuroon (QS. al-Māʾidah:89)

English Sahih International:

Allah will not impose blame upon you for what is meaningless in your oaths, but He will impose blame upon you for [breaking] what you intended of oaths. So its expiation is the feeding of ten needy people from the average of that which you feed your [own] families or clothing them or the freeing of a slave. But whoever cannot find [or afford it] – then a fast of three days [is required]. That is the expiation for oaths when you have sworn. But guard your oaths. Thus does Allah make clear to you His verses [i.e., revealed law] that you may be grateful. (QS. Al-Ma'idah, Ayah ௮௯)

Abdul Hameed Baqavi:

உங்களின் வீணான சத்தியங்களைக் கொண்டு அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிப்பதில்லை. எனினும், (யாதொன்றை) உறுதிப்படுத்த நீங்கள் செய்யும் சத்தியத்தைப் பற்றி (அதில் தவறு செய்தால்) உங்களைப் பிடிப்பான். (அதில் தவறு ஏற்பட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்குக் கொடுத்து வரும் உணவில் மத்திய தரமான உணவை பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும்; அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (பரிகாரமாகக் கொடுக்கக்கூடிய இவைகளில் எதனையும்) எவரும் பெற்றிருக்காவிட்டால் அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். (உங்கள் சத்தியத்தை நிறைவேற்ற முடியாவிட்டால்) நீங்கள் செய்த சத்தியத்திற்குரிய பரிகாரம் இதுதான். எனினும், நீங்கள் உங்கள் சத்தியங்களை (மிக எச்சரிக்கையுடன் பேணி)க் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக அவன் தன்னுடைய வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரி(த்து)க் (கூறு)கின்றான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௮௯)

Jan Trust Foundation

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது| உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம் மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை - உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் சத்தியங்களில் வீணானதற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்தி (பின்னர் அதை மீறி)யதற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது அவர்களுக்கு ஆடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும், (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருப்பது (அவசியம்). நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்கு பரிகாரமாகும் இது. உங்கள் சத்தியங்களை காப்பாற்றுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான்.