Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் ௧௪

Qur'an Surah Al-Hujurat Verse 14

ஸூரத்துல் ஹுஜுராத் [௪௯]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ قَالَتِ الْاَعْرَابُ اٰمَنَّا ۗ قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰكِنْ قُوْلُوْٓا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِيْ قُلُوْبِكُمْ ۗوَاِنْ تُطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ لَا يَلِتْكُمْ مِّنْ اَعْمَالِكُمْ شَيْـًٔا ۗاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (الحجرات : ٤٩)

qālati
قَالَتِ
Say
கூறுகின்றனர்
l-aʿrābu
ٱلْأَعْرَابُ
the Bedouins
கிராமத்து அரபிகள்
āmannā
ءَامَنَّاۖ
"We believe"
நாங்கள் ஈமான் கொண்டோம்
qul
قُل
Say
நீர் கூறுவீராக!
lam tu'minū
لَّمْ تُؤْمِنُوا۟
"Not you believe;
நீங்கள் ஈமான் கொள்ளவில்லை
walākin
وَلَٰكِن
but
என்றாலும்
qūlū
قُولُوٓا۟
say
கூறுங்கள்!
aslamnā
أَسْلَمْنَا
"We have submitted"
நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்
walammā yadkhuli
وَلَمَّا يَدْخُلِ
and has not yet entered
நுழையவில்லை
l-īmānu
ٱلْإِيمَٰنُ
the faith
ஈமான்
fī qulūbikum
فِى قُلُوبِكُمْۖ
in your hearts
உங்கள் உள்ளங்களில்
wa-in tuṭīʿū
وَإِن تُطِيعُوا۟
But if you obey
நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
and His Messenger
அவனது தூதருக்கும்
lā yalit'kum
لَا يَلِتْكُم
not He will deprive you
உங்களுக்கு குறைக்க மாட்டான்
min aʿmālikum
مِّنْ أَعْمَٰلِكُمْ
of your deeds
உங்கள் செயல்களில்
shayan
شَيْـًٔاۚ
anything
எதையும்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Qaalatil-A 'raabu aamannaa qul lam tu'minoo wa laakin qoolooo aslamnaa wa lamma yadkhulil eemaanu fee quloobikum wa in tutee'ul laaha wa Rasoolahoo laa yalitkum min a'maalikum shai'aa; innal laaha Ghafoorur Raheem (QS. al-Ḥujurāt:14)

English Sahih International:

The bedouins say, "We have believed." Say, "You have not [yet] believed; but say [instead], 'We have submitted,' for faith has not yet entered your hearts. And if you obey Allah and His Messenger, He will not deprive you from your deeds of anything. Indeed, Allah is Forgiving and Merciful." (QS. Al-Hujurat, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக்கொள்ளுங்கள். எனினும், மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின், உங்களுடைய நன்மைகளில், எதையும் அவன் உங்களுக்குக் குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்." (ஸூரத்துல் ஹுஜுராத், வசனம் ௧௪)

Jan Trust Foundation

“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கிராமத்து அரபிகள், “நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று கூறுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை.” என்றாலும் “நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கின்றோம்” என்று கூறுங்கள்! உங்கள் உள்ளங்களில் ஈமான் (இதுவரை) நுழையவில்லை. நீங்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்தால் உங்கள் (நல்ல) செயல்களில் எதையும் அவன் உங்களுக்கு குறைக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.