Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௫

Qur'an Surah Al-Fath Verse 25

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ ۚوَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَاۤءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَـُٔوْهُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢبِغَيْرِ عِلْمٍ ۚ لِيُدْخِلَ اللّٰهُ فِيْ رَحْمَتِهٖ مَنْ يَّشَاۤءُۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَلِيْمًا (الفتح : ٤٨)

humu
هُمُ
They
அவர்கள்தான்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
(are) those who disbelieved
நிராகரித்தவர்கள்
waṣaddūkum
وَصَدُّوكُمْ
and hindered you
இன்னும் உங்களைத் தடுத்தார்கள்
ʿani l-masjidi
عَنِ ٱلْمَسْجِدِ
from Al-Masjid Al-Haraam
மஸ்ஜிதை விட்டு
l-ḥarāmi
ٱلْحَرَامِ
Al-Masjid Al-Haraam
புனித(மானது)
wal-hadya
وَٱلْهَدْىَ
while the offering
பலிப் பிராணியையும்
maʿkūfan
مَعْكُوفًا
(was) prevented
வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட
an yablugha
أَن يَبْلُغَ
from reaching
அது சேருவதை விட்டு
maḥillahu
مَحِلَّهُۥۚ
its place (of sacrifice)
அதனுடைய இடத்திற்கு
walawlā
وَلَوْلَا
And if not
இல்லாமல் இருந்தால்
rijālun
رِجَالٌ
(for) men
ஆண்களும்
mu'minūna
مُّؤْمِنُونَ
believing
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
wanisāon
وَنِسَآءٌ
and women
பெண்களும்
mu'minātun
مُّؤْمِنَٰتٌ
believing
நம்பிக்கை கொண்ட(வர்கள்)
lam
لَّمْ
not
நீங்கள் அறியாமல்
taʿlamūhum
تَعْلَمُوهُمْ
you knew them
நீங்கள் அறியாமல் அவர்களை
an taṭaūhum
أَن تَطَـُٔوهُمْ
that you may trample them
நீங்கள் தாக்கிவிட
fatuṣībakum
فَتُصِيبَكُم
and would befall you
அவர்களை உங்களுக்கு ஏற்பட்டு விடும்
min'hum maʿarratun
مِّنْهُم مَّعَرَّةٌۢ
from them any harm
அவர்களினால்/பழிப்பு
bighayri ʿil'min
بِغَيْرِ عِلْمٍۖ
without knowledge
அறியாமல்
liyud'khila
لِّيُدْخِلَ
That Allah may admit
நுழைப்பதற்காக
l-lahu
ٱللَّهُ
That Allah may admit
அல்லாஹ்
fī raḥmatihi
فِى رَحْمَتِهِۦ
to His Mercy
தனது அருளில்
man yashāu
مَن يَشَآءُۚ
whom He wills
நாடுகின்றவர்களை
law tazayyalū
لَوْ تَزَيَّلُوا۟
If they had been apart
அவர்கள் நீங்கியிருந்தால்
laʿadhabnā
لَعَذَّبْنَا
surely, We would have punished
தண்டித்திருப்போம்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieved
நிராகரித்தவர்களை
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
ʿadhāban
عَذَابًا
(with) a punishment
தண்டனையால்
alīman
أَلِيمًا
painful
வலி தரக்கூடிய(து)

Transliteration:

Humul lazeena kafaroo wa saddookum 'anil-Masjidil-Haraami walhadya ma'koofan any yablugha mahillah; wa law laa rijaalum mu'minoona wa nisaaa'um mu'minaatul lam ta'lamoohum an tata'oohum fatuseebakum minhum ma'arratum bighairi 'ilmin liyud khilal laahu fee rahmatihee many yashaaa'; law tazayyaloo la'azzabnal lazeena kafaroo minhum 'azaaban aleema (QS. al-Fatḥ:25)

English Sahih International:

They are the ones who disbelieved and obstructed you from al-Masjid al-Haram while the offering was prevented from reaching its place of sacrifice. And if not for believing men and believing women whom you did not know – that you might trample [i.e., kill] them and there would befall you because of them dishonor without [your] knowledge – [you would have been permitted to enter Makkah]. [This was so] that Allah might admit to His mercy whom He willed. If they had been apart [from them], We would have punished those who disbelieved among them with painful punishment (QS. Al-Fath, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் வெற்றி கொண்ட) இந்த மக்காவாசிகள்தாம் (அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்) நிராகரித்து விட்டதுடன், உங்களையும் சிறப்புற்ற மஸ்ஜித் (என்னும் கஅபாவு)க்குச் செல்லாதும், குர்பானியையும் அது செல்ல வேண்டிய எல்லைக்குச் செல்லாதும் தடுத்து நிறுத்தியவர்கள். ஆயினும், அங்கு அவர்களுடன் நீங்கள் அறியாத நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் இருந்தனர். (அச்சமயம் உங்கள் எதிரிகளை நீங்கள் வெட்டினால்,) இந்த நம்பிக்கையாளர்களும் (நீங்கள் அறியாமல்) உங்கள் காலில் மிதிபட்டு, அதன் காரணமாக நீங்கள் அறியாது உங்களுக்கு நஷ்டம் ஏற்படக்கூடும் என்பது இல்லாதிருந்தால், (அச்சமயம் அவர்களுடன் போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து, மக்காவில் நீங்கள் நுழையும்படியும் செய்திருப்பான். அப்பொழுது நீங்கள் மக்காவில் நுழையாது உங்களை அவன் தடுத்துக் கொண்டதெல்லாம், ஹுதைபியா உடன்படிக்கையின் மத்திய காலத்தில்) அல்லாஹ் தான் நாடியவர்களை (இஸ்லாம் என்னும்) தன் அருளில் புகுத்துவதற்காகவே ஆகும். (நீங்கள் அறியாத மக்காவிலுள்ள நம்பிக்கையாளர்கள்) அவர்களிலிருந்து விலகியிருப்பார்களேயானால், (அவர்கள் மீது போர் புரிய உங்களுக்கு அனுமதி கொடுத்து) அவர்களில் உள்ள நிராகரிப்பவர்களை நாம் கடினமாகவே துன்புறுத்தி வேதனை செய்வோம். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள்தான் நிராகரித்தவர்கள், புனித மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியையும் அது அதனுடைய இடத்திற்கு (சென்று) சேருவதை விட்டு அவர்கள் தடுத்தார்கள். நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்தால் (நீங்கள் அந்த மக்கா வாசிகளை தாக்கும் படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிட்டதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் -கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). (அந்த நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களை விட்டு) விலகி நீங்கியிருந்தால் (-ஹிஜ்ரத் செய்திருந்தால்) அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை வலி தரக்கூடிய தண்டனையால் தண்டித்திருப்போம்.