Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௧௫

Qur'an Surah Al-Fath Verse 15

ஸூரத்துல் ஃபத்ஹ் [௪௮]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَيَقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰى مَغَانِمَ لِتَأْخُذُوْهَا ذَرُوْنَا نَتَّبِعْكُمْ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ ۗ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ ۖفَسَيَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَنَا ۗ بَلْ كَانُوْا لَا يَفْقَهُوْنَ اِلَّا قَلِيْلًا (الفتح : ٤٨)

sayaqūlu
سَيَقُولُ
Will say
கூறுவார்(கள்)
l-mukhalafūna
ٱلْمُخَلَّفُونَ
those who remained behind
பின்தங்கியவர்கள்
idhā inṭalaqtum
إِذَا ٱنطَلَقْتُمْ
when you set forth
நீங்கள் சென்றால்
ilā maghānima
إِلَىٰ مَغَانِمَ
towards (the) spoils of war
கனீமத்துகளை நோக்கி
litakhudhūhā
لِتَأْخُذُوهَا
to take it
அவற்றை நீங்கள் எடுப்பதற்காக
dharūnā
ذَرُونَا
"Allow us
எங்களை விடுங்கள்
nattabiʿ'kum
نَتَّبِعْكُمْۖ
(to) follow you"
நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்
yurīdūna
يُرِيدُونَ
They wish
அவர்கள் நாடுகின்றனர்
an yubaddilū
أَن يُبَدِّلُوا۟
to change
அவர்கள் மாற்றிவிட
kalāma
كَلَٰمَ
(the) Words
பேச்சை
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வின்
qul
قُل
Say
நீர் கூறுவீராக!
lan tattabiʿūnā
لَّن تَتَّبِعُونَا
"Never will you follow us
அறவே நீங்கள் எங்களை பின்பற்ற மாட்டீர்கள்
kadhālikum
كَذَٰلِكُمْ
Thus
இப்படித்தான்
qāla
قَالَ
Allah said
கூறி இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah said
அல்லாஹ்
min qablu
مِن قَبْلُۖ
before" before"
இதற்கு முன்னரே
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
Then they will say
அவர்கள் கூறுவார்கள்
bal
بَلْ
"Nay
இல்லை
taḥsudūnanā
تَحْسُدُونَنَاۚ
you envy us"
நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்
bal
بَلْ
Nay
மாறாக
kānū
كَانُوا۟
they were
இருக்கின்றனர்
lā yafqahūna
لَا يَفْقَهُونَ
not understanding
விளங்காதவர்களாக
illā
إِلَّا
except
தவிர
qalīlan
قَلِيلًا
a little
குறைந்த விஷயங்களை

Transliteration:

Sa yaqoolul mukhalla foona izan talaqtum ilaa maghaanima litaakhuzoohaa zaroonaa nattabi'kum yureedoona any yubaddiloo Kalaamallaah; qul lan tattabi'oonaa kazaalikum qaalal laahu min qablu fasa yaqooloona bal tahsudoonanna; bal kaanoo laa yafqahoona illaa qaleela (QS. al-Fatḥ:15)

English Sahih International:

Those who remained behind will say when you set out toward the war booty to take it, "Let us follow you." They wish to change the words of Allah. Say, "Never will you follow us. Thus did Allah say before." So they will say, "Rather, you envy us." But [in fact] they were not understanding except a little. (QS. Al-Fath, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! முன்னர் போருக்கு உங்களுடன் வராது) பின் தங்கிவிட்டவர்கள், போரில் கிடைத்த பொருள்களை எடுத்துக் கொள்ள நீங்கள் செல்லும் சமயத்தில், (உங்களை நோக்கி) "நாங்களும் உங்களைப் பின்பற்றிவர எங்களை (அனுமதித்து) விடுங்கள்" என்று கூறுவார்கள். இவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளையை மாற்றி விடவே கருதுகின்றார்கள். ஆகவே, நீங்கள் அவர்களை நோக்கி "நீங்கள் எங்களைப் பின்பற்றிவர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் இவ்வாறு கூறிவிட்டான்" என்றும் கூறுங்கள் அதற்கவர்கள், ("அல்லாஹ் ஒன்றும் கூறவில்லை;") நீங்கள்தான் நம்மீது பொறாமை கொண்டு (இவ்வாறு கூறுகின்றீர்கள்) என்று கூறுவார்கள். அன்றி, அவர்களில் சிலரைத் தவிர (மற்றெவரும் இதன் கருத்தை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் ஃபத்ஹ், வசனம் ௧௫)

Jan Trust Foundation

போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர அனுமதி கொடுங்கள்” என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்” என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக; ஆனால், அவர்கள்| “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் கனீமத்துகளை நோக்கி அவற்றை நீங்கள் எடுப்பதற்காக சென்றால், “எங்களை விடுங்கள்! நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று (போருக்கு வராமல்) பின்தங்கியவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் பேச்சை அவர்கள் மாற்றிவிட நாடுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் அறவே எங்களை பின்பற்ற மாட்டீர்கள். இப்படித்தான் இதற்கு முன்னரே (இதைப் பற்றி) அல்லாஹ் (எங்களுக்கு) கூறி இருக்கின்றான்.” “இல்லை, நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். மாறாக, குறைந்த விஷயங்களைத் தவிர (அதிகமான விஷயங்களை மார்க்கத்தில்) அவர்கள் விளங்காதவர்களாக இருக்கின்றனர்.