Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து முஹம்மது வசனம் ௪

Qur'an Surah Muhammad Verse 4

ஸூரத்து முஹம்மது [௪௭]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِۗ حَتّٰٓى اِذَآ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوا الْوَثَاقَۖ فَاِمَّا مَنًّاۢ بَعْدُ وَاِمَّا فِدَاۤءً حَتّٰى تَضَعَ الْحَرْبُ اَوْزَارَهَا ەۛ ذٰلِكَ ۛ وَلَوْ يَشَاۤءُ اللّٰهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلٰكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍۗ وَالَّذِيْنَ قُتِلُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ (محمد : ٤٧)

fa-idhā laqītumu
فَإِذَا لَقِيتُمُ
So when you meet
நீங்கள் சந்தித்தால்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்களை
faḍarba
فَضَرْبَ
then strike
வெட்டுங்கள்!
l-riqābi
ٱلرِّقَابِ
the necks
பிடரிகளை
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā athkhantumūhum
إِذَآ أَثْخَنتُمُوهُمْ
when you have subdued them
அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்
fashuddū
فَشُدُّوا۟
then bind firmly
உறுதியாகக் கட்டுங்கள்!
l-wathāqa
ٱلْوَثَاقَ
the bond
கயிறுகளில்
fa-immā
فَإِمَّا
then either
ஒன்று
mannan
مَنًّۢا
a favor
உபகாரம் புரியுங்கள்!
baʿdu
بَعْدُ
afterwards
அதற்குப் பின்னர்
wa-immā
وَإِمَّا
or
அல்லது
fidāan
فِدَآءً
ransom
பிணைத்தொகை கொடுக்கட்டும்!
ḥattā
حَتَّىٰ
until
இறுதியாக
taḍaʿa
تَضَعَ
lays down
முடிக்கின்ற (வரை)
l-ḥarbu
ٱلْحَرْبُ
the war
போர்
awzārahā
أَوْزَارَهَاۚ
its burdens
அதன் சுமைகளை
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
walaw yashāu l-lahu
وَلَوْ يَشَآءُ ٱللَّهُ
And if Allah had willed Allah had willed
அல்லாஹ் நாடினால்
la-intaṣara
لَٱنتَصَرَ
surely, He could have taken retribution
பழிதீர்த்திருப்பான்
min'hum
مِنْهُمْ
from them
அவர்களிடம்
walākin
وَلَٰكِن
but
என்றாலும்
liyabluwā
لِّيَبْلُوَا۟
to test
அவன்சோதிப்பதற்காக
baʿḍakum
بَعْضَكُم
some of you
உங்களில் சிலரை
bibaʿḍin
بِبَعْضٍۗ
with others
சிலர் மூலமாக
wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
qutilū
قُتِلُوا۟
are killed
கொல்லப்பட்டார்களோ
fī sabīli
فِى سَبِيلِ
in (the) way of Allah
பாதையில்
l-lahi
ٱللَّهِ
(the) way of Allah
அல்லாஹ்வின்
falan yuḍilla
فَلَن يُضِلَّ
then never He will cause to be lost
வீணாக்கிவிட மாட்டான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
their deeds
அவர்களின் அமல்களை

Transliteration:

Fa-izaa laqeetumul lazeena kafaroo fadarbar riqaab, hattaaa izaa askhan tumoohum fashuddul wasaaq, fa immaa mannnam ba'du wa immaa fidaaa'an hattaa tada'al harbu awzaarahaa; zaalika wa law yashaaa'ul laahu lantasara minhum wa laakil laiyabluwa ba'dakum biba'd; wallazeena qutiloo fee sabeelil laahi falany yudilla a'maalahum (QS. Muḥammad:4)

English Sahih International:

So when you meet those who disbelieve [in battle], strike [their] necks until, when you have inflicted slaughter upon them, then secure [their] bonds, and either [confer] favor afterwards or ransom [them] until the war lays down its burdens. That [is the command]. And if Allah had willed, He could have taken vengeance upon them [Himself], but [He ordered armed struggle] to test some of you by means of others. And those who are killed in the cause of Allah – never will He waste their deeds. (QS. Muhammad, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக வேனும் விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.) (ஸூரத்து முஹம்மது, வசனம் ௪)

Jan Trust Foundation

(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் (உங்கள் எதிரி நாட்டில் இருந்து உங்களிடம் போர் செய்ய வருகின்ற) நிராகரித்தவர்களை (போர்க்களத்தில்) சந்தித்தால் (அவர்களின்) பிடரிகளை வெட்டுங்கள்! இறுதியாக, நீங்கள் அவர்களை மிகைத்துவிட்டால், (அவர்களை கைது செய்து) கயிறுகளில் உறுதியாகக் கட்டுங்கள்! ஆக, அதற்குப் பின்னர் ஒன்று, (அவர்கள் மீது நீங்கள்) உபகாரம் புரியுங்கள்! அல்லது, (அவர்கள் உங்களிடம்) பிணைத்தொகை கொடு(த்து தங்களை விடுவி)க் கட்டும்! இறுதியாக, போர் அதன் சுமைகளை முடிக்கின்ற வரை. (அதாவது இறுதி காலத்தில் ஈஸா நபி இறங்கி வந்த பின்னர், நிராகரிப்பாளர்கள் எல்லோரும் இஸ்லாமை ஏற்கின்றவரை அவர்களிடம் போர் செய்யும் போது இதே சட்டங்களை பின்பற்றுங்கள்!) இதுதான் (உண்மையாகும்). அல்லாஹ் நாடினால் (உங்களுக்கும் அவர்களுக்கும் போர் நடக்காமலேயே) அவன் அவர்களிடம் (இவ்வுலகிலேயே விரைவான தண்டனையைக் கொண்டு) பழிதீர்த்திருப்பான். என்றாலும், உங்களில் சிலரை சிலர் மூலமாக அவன் சோதிப்பதற்காக (அவன் இவ்வாறு செய்தான். உங்களில் போர் செய்து, அதில் பொறுமையாக இருப்பவர்கள் யார் என்று சோதிப்பதற்கும், உங்களால் கொல்லப்பட்டவர்களைக் கொண்டு எஞ்சிய நிராகரிப்பாளர்கள் படிப்பினைப் பெற்று இஸ்லாமை ஏற்கவேண்டும், அல்லது பணிந்து போர் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டார்களோ அவர்களின் அமல்களை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்.