Skip to content

ஸூரா ஸூரத்து முஹம்மது - Page: 4

Muhammad

(Muḥammad)

௩௧

وَلَنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ ٣١

walanabluwannakum
وَلَنَبْلُوَنَّكُمْ
நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம்
ḥattā naʿlama
حَتَّىٰ نَعْلَمَ
நாம் அறிகின்றவரை
l-mujāhidīna
ٱلْمُجَٰهِدِينَ
ஜிஹாது செய்பவர்களை
minkum
مِنكُمْ
உங்களில்
wal-ṣābirīna
وَٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர் களையும்
wanabluwā
وَنَبْلُوَا۟
இன்னும் நாம் சோதிப்போம்
akhbārakum
أَخْبَارَكُمْ
உங்கள் செய்திகளை
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (மனமொப்பி) போர் புரிபவர்கள் எவர்கள் என்பதையும், (போரில் ஏற்படும்) கஷ்டங்களை (உறுதியாக) சகித்திருப்பவர்கள் எவரென்பதையும் நாம் அறிந்து வெளிப்படுத்தும் வரையில், உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௧)
Tafseer
௩௨

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَاۤقُّوا الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰى لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْـًٔاۗ وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ ٣٢

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waṣaddū
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையில் இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
washāqqū
وَشَآقُّوا۟
இன்னும் மாறுசெய்தார்கள்
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
min baʿdi mā tabayyana
مِنۢ بَعْدِ مَا تَبَيَّنَ
தெளிவானதற்குப் பின்னர்
lahumu
لَهُمُ
தங்களுக்கு
l-hudā
ٱلْهُدَىٰ
நேர்வழி
lan yaḍurrū
لَن يَضُرُّوا۟
அறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாது
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
shayan
شَيْـًٔا
எதையும்
wasayuḥ'biṭu
وَسَيُحْبِطُ
இன்னும் வீணாக்கி விடுவான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
நிச்சயமாக எவர்கள் நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னரும் (அதனை) நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வின் பாதையை (மற்றவர்களுக்கு)த் தடுத்துக்கொண்டு (அல்லாஹ்வுடைய) தூதருக்கு விரோதமாக நடக்கின்றார்களோ அவர்கள், (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. அவர்களுடைய (சூழ்ச்சியான) காரியங்களையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் அழித்து விடுவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௨)
Tafseer
௩௩

۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْٓا اَعْمَالَكُمْ ٣٣

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
aṭīʿū
أَطِيعُوا۟
கீழ்ப்படியுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
wa-aṭīʿū
وَأَطِيعُوا۟
இன்னும் கீழ்ப்படியுங்கள்!
l-rasūla
ٱلرَّسُولَ
தூதருக்கு
walā tub'ṭilū
وَلَا تُبْطِلُوٓا۟
வீணாக்காதீர்கள்!
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் மெய்யாகவே அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். (அவர்களுக்கு மாறு செய்து) உங்களுடைய நன்மைகளை நீங்கள் வீணாக்கி விடாதீர்கள். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௩)
Tafseer
௩௪

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ٣٤

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
waṣaddū
وَصَدُّوا۟
இன்னும் தடுத்தார்கள்
ʿan sabīli
عَن سَبِيلِ
பாதையில் இருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
thumma mātū
ثُمَّ مَاتُوا۟
பிறகு மரணித்தார்கள்
wahum
وَهُمْ
தாங்கள் இருக்கின்ற நிலையில்
kuffārun
كُفَّارٌ
நிராகரிப்பாளர்களாக
falan yaghfira
فَلَن يَغْفِرَ
மன்னிக்கவே மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْ
அவர்களை
எவர்கள் நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையையும் தடுத்துக் கொண்டு, நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றார்களோ, அவர்களுடைய குற்றங்களை அல்லாஹ் ஒரு காலத்திலும் மன்னிப்பதே இல்லை. ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௪)
Tafseer
௩௫

فَلَا تَهِنُوْا وَتَدْعُوْٓا اِلَى السَّلْمِۖ وَاَنْتُمُ الْاَعْلَوْنَۗ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِرَكُمْ اَعْمَالَكُمْ ٣٥

falā tahinū
فَلَا تَهِنُوا۟
பலவீனப்படாதீர்கள்
watadʿū
وَتَدْعُوٓا۟
அழைத்து விடாதீர்கள்!
ilā l-salmi
إِلَى ٱلسَّلْمِ
சமாதானத்திற்கு
wa-antumu
وَأَنتُمُ
நீங்கள்தான்
l-aʿlawna
ٱلْأَعْلَوْنَ
மிக உயர்வானவர்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன் இருக்கின்றான்
walan yatirakum
وَلَن يَتِرَكُمْ
உங்களுக்கு குறைக்கவேமாட்டான்
aʿmālakum
أَعْمَٰلَكُمْ
உங்கள் அமல்களை
(போர் புரியும் நம்பிக்கையாளர்களே! இழிவு தரக்கூடிய விதத்தில்) நீங்கள் தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள். (ஏனென்றால்,) நீங்கள்தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன்தான் இருக்கின்றான். உங்களுடைய நன்மைகளில் ஒன்றையும் அவன் குறைத்துவிடமாட்டான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௫)
Tafseer
௩௬

اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا يُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا يَسْـَٔلْكُمْ اَمْوَالَكُمْ ٣٦

innamā l-ḥayatu l-dun'yā
إِنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை எல்லாம்
laʿibun
لَعِبٌ
விளையாட்டு(ம்)
walahwun
وَلَهْوٌۚ
வேடிக்கையும்தான்
wa-in tu'minū
وَإِن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டால்
watattaqū
وَتَتَّقُوا۟
இன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால்
yu'tikum
يُؤْتِكُمْ
அவன் உங்களுக்கு கொடுப்பான்
ujūrakum
أُجُورَكُمْ
உங்கள் கூலிகளை
walā yasalkum
وَلَا يَسْـَٔلْكُمْ
அவன் உங்களிடம் கேட்கமாட்டான்
amwālakum
أَمْوَٰلَكُمْ
உங்கள்செல்வங்களை
இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும் வேடிக்கையும் தான். நீங்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு அவனுக்குப் பயந்து நடந்துகொண்டால், உங்களுடைய பொருள்களை அவன் (தனக்காகக்) கேட்கவில்லை. (உங்களுடைய நன்மைக்காகவே கேட்கின்றான்.) ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௬)
Tafseer
௩௭

اِنْ يَّسْـَٔلْكُمُوْهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوْا وَيُخْرِجْ اَضْغَانَكُمْ ٣٧

in yasalkumūhā
إِن يَسْـَٔلْكُمُوهَا
அவன் அவற்றை உங்களிடம் கேட்டால்
fayuḥ'fikum
فَيُحْفِكُمْ
இன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால்
tabkhalū
تَبْخَلُوا۟
நீங்கள் கருமித்தனம் செய்வீர்கள்
wayukh'rij
وَيُخْرِجْ
இன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்
aḍghānakum
أَضْغَٰنَكُمْ
உங்கள் குரோதங்களை
அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதனைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்களுடைய கெட்ட எண்ணத்தை வெளியாக்கி விடுவான். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௭)
Tafseer
௩௮

هٰٓاَنْتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ۚوَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّفْسِهٖ ۗوَاللّٰهُ الْغَنِيُّ وَاَنْتُمُ الْفُقَرَاۤءُ ۗ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْۙ ثُمَّ لَا يَكُوْنُوْٓا اَمْثَالَكُمْ ࣖ ٣٨

hāantum hāulāi
هَٰٓأَنتُمْ هَٰٓؤُلَآءِ
நீங்கள்தான்
tud'ʿawna
تُدْعَوْنَ
அழைக்கப்படுகிறீர்கள்
litunfiqū
لِتُنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்வதற்கு
fī sabīli
فِى سَبِيلِ
பாதையில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
faminkum
فَمِنكُم
உங்களில் இருக்கின்றார்
man yabkhalu
مَّن يَبْخَلُۖ
கருமித்தனம் செய்பவரும்
waman yabkhal
وَمَن يَبْخَلْ
எவர் கருமித்தனம் செய்வாரோ
fa-innamā yabkhalu
فَإِنَّمَا يَبْخَلُ
அவர் கருமித்தனம் செய்வதெல்லாம்
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۚ
அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்தான்
l-ghaniyu
ٱلْغَنِىُّ
முற்றிலும் நிறைவானவன்
wa-antumu
وَأَنتُمُ
நீங்கள்தான்
l-fuqarāu
ٱلْفُقَرَآءُۚ
தேவையுள்ளவர்கள்
wa-in tatawallaw
وَإِن تَتَوَلَّوْا۟
நீங்கள் விலகிச்சென்றால்
yastabdil
يَسْتَبْدِلْ
அவன் மாற்றுவான்
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
ghayrakum
غَيْرَكُمْ
நீங்கள் அல்லாத
thumma
ثُمَّ
பிறகு
lā yakūnū
لَا يَكُونُوٓا۟
அவர்கள் இருக்க மாட்டார்கள்
amthālakum
أَمْثَٰلَكُم
உங்களைப் போன்று
(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கின்றார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கின்றார். அல்லாஹ்வோ தேவை யற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கின்றீர்கள். (அவனுடைய கட்டளைகளைப்) பின்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்க மாட்டார்கள். ([௪௭] ஸூரத்து முஹம்மது: ௩௮)
Tafseer