Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௮௬

Qur'an Surah Az-Zukhruf Verse 86

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ يَعْلَمُوْنَ (الزخرف : ٤٣)

walā yamliku
وَلَا يَمْلِكُ
And not have power
உரிமை பெற மாட்டார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்களை
yadʿūna
يَدْعُونَ
they invoke
அவர்கள் அழைக்கின்றார்கள்
min dūnihi
مِن دُونِهِ
besides Him besides Him
அவனையன்றி
l-shafāʿata
ٱلشَّفَٰعَةَ
(for) the intercession
சிபாரிசு செய்வதற்கு
illā man
إِلَّا مَن
except who
ஆனால்/எவர்கள்
shahida
شَهِدَ
testifies
சாட்சிகூறினார்(களோ)
bil-ḥaqi
بِٱلْحَقِّ
to the truth
உண்மைக்கு
wahum
وَهُمْ
and they
அவர்கள்
yaʿlamūna
يَعْلَمُونَ
know
நன்கு அறிந்தவர்களாக

Transliteration:

Wa laa yamlikul lazeena yad'oona min doonihish shafaa'ata illaa man shahida bilhaqqi wa hum ya'lamoon (QS. az-Zukhruf:86)

English Sahih International:

And those they invoke besides Him do not possess [power of] intercession; but only those who testify to the truth [can benefit], and they know. (QS. Az-Zukhruf, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையன்றி எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதனைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௮௬)

Jan Trust Foundation

அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல் இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (நல்லவர்கள்) சிபாரிசு செய்வார்கள். (தங்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)