Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௧௧

Qur'an Surah Az-Zukhruf Verse 11

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் [௪௩]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْ نَزَّلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۢ بِقَدَرٍۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّيْتًا ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ (الزخرف : ٤٣)

wa-alladhī
وَٱلَّذِى
And the One Who
இன்னும் எப்படிப்பட்டவன்
nazzala
نَزَّلَ
sends down
இறக்கினான்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
māan
مَآءًۢ
water
மழையை
biqadarin
بِقَدَرٍ
in (due) measure
ஓர் அளவோடு
fa-ansharnā
فَأَنشَرْنَا
then We revive
ஆக, நாம் உயிர்ப்பிக்கின்றோம்
bihi baldatan
بِهِۦ بَلْدَةً
with it a land
அதன் மூலம்/பூமியை
maytan
مَّيْتًاۚ
dead
இறந்து போன
kadhālika
كَذَٰلِكَ
thus
இவ்வாறுதான்
tukh'rajūna
تُخْرَجُونَ
you will be brought forth
நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்

Transliteration:

Wallazee nazzala minas samaaa'i maaa'am biqadarin fa anshamaa bihee baldatam maitaa' kazaalika tukhrajoon (QS. az-Zukhruf:11)

English Sahih International:

And who sends down rain from the sky in measured amounts, and We revive thereby a dead land – thus will you be brought forth – (QS. Az-Zukhruf, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அவன் தான் மேகத்திலிருந்து மழையைத் தனது திட்டப்படி இறக்கி வைக்கின்றான். (இவ்வாறு செய்கின்ற அல்லாஹ்வாகிய) நாம்தாம், பின்னர் அதனைக் கொண்டு (மழையை பொழியச் செய்து) வறண்டுபோன பூமியை உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் சமாதிகளிலிருந்து உயிர் கொடுத்து) வெளி யேற்றப்படுவீர்கள். (ஸூரத்துஜ் ஜுக்ருஃப், வசனம் ௧௧)

Jan Trust Foundation

அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து) வெளியாக்கப்படுவீர்கள்.