Skip to content

ஸூரா ஸூரத்துஜ் ஜுக்ருஃப் - Page: 4

Az-Zukhruf

(az-Zukhruf)

௩௧

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ ٣١

waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறுகின்றனர்
lawlā nuzzila
لَوْلَا نُزِّلَ
இறக்கப்பட வேண்டாமா!
hādhā l-qur'ānu
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
ʿalā rajulin
عَلَىٰ رَجُلٍ
மனிதர் மீது
mina l-qaryatayni
مِّنَ ٱلْقَرْيَتَيْنِ
இந்த இரண்டு ஊர்களில் உள்ள
ʿaẓīmin
عَظِيمٍ
ஒரு பெரிய(வர்)
அன்றி (தாயிஃப், மக்கா ஆகிய) இவ்விரண்டு ஊர்களிலுள்ள யாதொரு பெரிய மனிதன் மீது இந்தக் குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டாமா? (அவ்வாறாயின் நாங்கள் அதனை நம்பிக்கை கொண்டிருப்போம்) என்றும் கூறுகின்றனர். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௧)
Tafseer
௩௨

اَهُمْ يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَۗ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَاۙ وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا ۗوَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ٣٢

ahum yaqsimūna
أَهُمْ يَقْسِمُونَ
அவர்கள் பங்கு வைக்கின்றனரா?
raḥmata
رَحْمَتَ
அருளை
rabbika
رَبِّكَۚ
உமது இறைவனின்
naḥnu
نَحْنُ
நாம்தான்
qasamnā
قَسَمْنَا
பங்குவைத்தோம்.
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
maʿīshatahum
مَّعِيشَتَهُمْ
அவர்களது வாழ்க்கையை
fī l-ḥayati l-dun'yā
فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
இவ்வுலக வாழ்வில்
warafaʿnā
وَرَفَعْنَا
இன்னும் உயர்வாக்கினோம்
baʿḍahum
بَعْضَهُمْ
அவர்களில் சிலரை
fawqa
فَوْقَ
மேலாக
baʿḍin
بَعْضٍ
சிலருக்கு
darajātin
دَرَجَٰتٍ
தகுதிகளால்
liyattakhidha
لِّيَتَّخِذَ
எடுத்துக் கொள்வதற்காக
baʿḍuhum
بَعْضُهُم
அவர்களில் சிலர்
baʿḍan
بَعْضًا
சிலரை
sukh'riyyan
سُخْرِيًّاۗ
பணியாளராக
waraḥmatu
وَرَحْمَتُ
அருள்தான்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்ததாகும்
mimmā yajmaʿūna
مِّمَّا يَجْمَعُونَ
அவர்கள் சேகரிப்பதைவிட
(நபியே!) உங்களின் இறைவனின் அருளைப் பங்கிடுபவர்கள் இவர்கள் தாமா? இவ்வுலகத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் தரத்தை அவர்களுக்கிடையில் நாமே பங்கிட்டு, அவர்களில் சிலருடைய பதவியை சிலரைவிட நாம்தான் உயர்த்தினோம். அவர்களில் சிலர், சிலரை (வேலைக்காரர்களாக) ஐக்கியப்படுத்திக் கொள்வதற்காக, (நபித்துவம் என்னும்) உங்களது இறைவனின் அருளோ, அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் பொருளைவிட மிக மேலானதாகும். (அதனை அவன் விரும்பிய தன் அடியாருக்குத்தான் அளிப்பான்.) ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௨)
Tafseer
௩௩

وَلَوْلَآ اَنْ يَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ يَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُيُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُوْنَۙ ٣٣

walawlā
وَلَوْلَآ
இல்லையெனில்
an yakūna
أَن يَكُونَ
ஆகிவிடுவார்கள் என்று
l-nāsu
ٱلنَّاسُ
மக்கள்
ummatan
أُمَّةً
சமுதாயமாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
lajaʿalnā
لَّجَعَلْنَا
ஆக்கியிருப்போம்
liman yakfuru
لِمَن يَكْفُرُ
நிராகரிப்பவர்களுக்கு
bil-raḥmāni
بِٱلرَّحْمَٰنِ
ரஹ்மானை
libuyūtihim
لِبُيُوتِهِمْ
அவர்களின் வீடுகளுக்கு
suqufan
سُقُفًا
முகடுகளை(யும்)
min fiḍḍatin
مِّن فِضَّةٍ
வெள்ளியினால் ஆன
wamaʿārija
وَمَعَارِجَ
ஏணிகளையும்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
yaẓharūna
يَظْهَرُونَ
ஏறுவார்கள்
(இந்நிராகரிப்பவர்களின் செல்வ செழிப்பைக் கண்டு, ஆசை கொண்ட மற்ற) மனிதர்கள் அனைவருமே (அவர்களைப் போல் நிராகரிக்கும்) ஒரே வகுப்பினராக ஆகிவிடுவார்கள் என்று இல்லாதிருப்பின் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானை நிராகரிப்ப வர்களின் வீட்டு முகடுகளையும் அதன்மீது அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளையும் கூட நாம் வெள்ளியினால் ஆக்கி விடுவோம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௩)
Tafseer
௩௪

وَلِبُيُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَيْهَا يَتَّكِـُٔوْنَۙ ٣٤

walibuyūtihim
وَلِبُيُوتِهِمْ
இன்னும் அவர்களின் வீடுகளுக்கு
abwāban
أَبْوَٰبًا
கதவுகளையும்
wasururan
وَسُرُرًا
கட்டில்களையும்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் மீது
yattakiūna
يَتَّكِـُٔونَ
அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்
அவர்களுடைய வீடுகளின் வாயில்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் கூட (வெள்ளியினால்) ஆக்கி இருப்போம். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௪)
Tafseer
௩௫

وَزُخْرُفًاۗ وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ۗوَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِيْنَ ࣖ ٣٥

wazukh'rufan
وَزُخْرُفًاۚ
இன்னும் தங்கத்தையும்
wa-in kullu
وَإِن كُلُّ
எல்லாம் இல்லை
dhālika
ذَٰلِكَ
இவை
lammā matāʿu
لَمَّا مَتَٰعُ
இன்பங்களே தவிர
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۚ
உலக வாழ்க்கையின்
wal-ākhiratu
وَٱلْءَاخِرَةُ
மறுமை
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
உமது இறைவனிடம்
lil'muttaqīna
لِلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
(வெள்ளி என்ன! இவைகளைத்) தங்கத்தாலேயே (அலங்கரித்தும் விடுவோம்.) ஏனென்றால், இவை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (அழிந்துவிடக் கூடிய) அற்ப இன்பங்களே அன்றி வேறில்லை. உங்களது இறைவனிடம் இருக்கும் மறுமை(யின் நிலையான இன்ப வாழ்க்கையோ, மிக மேலானதும் நிலையானதுமாகும். அது) இறைவனுக்குப் பயந்து நடப்பவர்களுக்குத்தான் சொந்தமானது. ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௫)
Tafseer
௩௬

وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ ٣٦

waman yaʿshu
وَمَن يَعْشُ
யார் புறக்கணிப்பாரோ
ʿan dhik'ri
عَن ذِكْرِ
நினைவு கூர்வதை
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனை
nuqayyiḍ
نُقَيِّضْ
நாம் சாட்டிவிடுவோம்
lahu
لَهُۥ
அவருக்கு
shayṭānan
شَيْطَٰنًا
ஒரு ஷைத்தானை
fahuwa lahu
فَهُوَ لَهُۥ
அவன் அவருக்கு
qarīnun
قَرِينٌ
நண்பனாக
எவன் ரஹ்மானுடைய நல்லுபதேசத்திலிருந்து கண்ணை மூடிக்கொள்கிறானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை (நண்பனாகச்) சாட்டிவிடுவோம். அவன் அவனுக்கு இணைபிரியாத தோழனாகி விடுகிறான். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௬)
Tafseer
௩௭

وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ٣٧

wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
layaṣuddūnahum
لَيَصُدُّونَهُمْ
அவர்களை தடுக்கின்றனர்
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
wayaḥsabūna
وَيَحْسَبُونَ
இன்னும் எண்ணுகிறார்கள்
annahum
أَنَّهُم
நிச்சயமாக தாங்கள்
muh'tadūna
مُّهْتَدُونَ
நேர்வழி நடப்பவர்கள்தான்
நிச்சயமாக (அந்த ஷைத்தான்கள்தாம்) அவர்களை நேரான பாதையில் இருந்து தடுத்து விடுகின்றனர். எனினும், அவர்களோ தாங்கள் நேரான பாதையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௭)
Tafseer
௩௮

حَتّٰىٓ اِذَا جَاۤءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِيْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ ٣٨

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā
إِذَا
அவன் வரும் போது
jāanā
جَآءَنَا
அவன் வரும் போது நம்மிடம்
qāla
قَالَ
கூறுவான்
yālayta
يَٰلَيْتَ
இருக்க வேண்டுமே!
baynī
بَيْنِى
எனக்கு மத்தியிலும்
wabaynaka
وَبَيْنَكَ
உனக்கு மத்தியிலும்
buʿ'da
بُعْدَ
இடைப்பட்ட தூரம்
l-mashriqayni
ٱلْمَشْرِقَيْنِ
கிழக்கிற்கும் மேற்கிற்கும்
fabi'sa l-qarīnu
فَبِئْسَ ٱلْقَرِينُ
அவன் மிகக் கெட்ட நண்பன்
நம்மிடம் (வரும் வரையில்தான் அவ்வாறு எண்ணிக் கொண்டிருப்பார்கள்.) அவர்கள் (நம்மிடம்) வந்த பின்னரோ (அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி) "எனக்கும் உமக்கு மிடையில் கீழ் திசைக்கும், மேல் திசைக்கும் உள்ள தொலைதூரமாக இருந்திருக்க வேண்டாமா?" என்றும், "(எங்களை வழிகெடுத்த எங்களுடைய) இந்தத் தோழன் மிகப் பொல்லாதவன்" என்றும் கூறுவார்கள். ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௮)
Tafseer
௩௯

وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ٣٩

walan yanfaʿakumu
وَلَن يَنفَعَكُمُ
உங்களுக்கு அறவே பலனளிக்காது
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
idh ẓalamtum
إِذ ظَّلَمْتُمْ
நீங்கள் அநியாயம் செய்த காரணத்தால்
annakum
أَنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
fī l-ʿadhābi
فِى ٱلْعَذَابِ
வேதனையில்
mush'tarikūna
مُشْتَرِكُونَ
இணைந்திருப்பது
(அதற்கு அவர்களை நோக்கி) "நீங்கள் வரம்பு மீறி பாவம் செய்ததன் காரணமாக இன்றைய தினம் உங்களுக்கு (எதுவுமே) பயனளிக்காது. நிச்சயமாக நீங்கள் வேதனையை அனுபவிப்பதில் (அந்த ஷைத்தான்களுக்குக்) கூட்டானவர்கள்தாம்" (என்றும் கூறப்படும்). ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௩௯)
Tafseer
௪௦

اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِى الْعُمْيَ وَمَنْ كَانَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٤٠

afa-anta tus'miʿu
أَفَأَنتَ تُسْمِعُ
நீர் செவி ஏற்க வைக்க முடியுமா?
l-ṣuma
ٱلصُّمَّ
அந்த செவிடர்களை
aw
أَوْ
அல்லது
tahdī
تَهْدِى
நீர் நேர்வழி நடத்திட முடியுமா?
l-ʿum'ya
ٱلْعُمْىَ
அந்த குருடர்களை
waman kāna
وَمَن كَانَ
இன்னும் இருப்பவர்களை
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(நபியே!) நீங்கள் செவிடனைக் கேட்கும்படி செய்து விடுவீர்களா? அல்லது குருடனை (அல்லது மனமுரண்டாகவே) பகிரங்கமான வழிகேட்டிலிருப்பவனை நேரான வழியில் நீங்கள் செலுத்தி விடுவீர்களா? ([௪௩] ஸூரத்துஜ் ஜுக்ருஃப்: ௪௦)
Tafseer