குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௫௩
Qur'an Surah Fussilat Verse 53
ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
سَنُرِيْهِمْ اٰيٰتِنَا فِى الْاٰفَاقِ وَفِيْٓ اَنْفُسِهِمْ حَتّٰى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّۗ اَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ (فصلت : ٤١)
- sanurīhim
- سَنُرِيهِمْ
- Soon We will show them
- விரைவில் அவர்களுக்கு நாம் காண்பிப்போம்
- āyātinā
- ءَايَٰتِنَا
- Our Signs
- நமது அத்தாட்சிகளை
- fī l-āfāqi
- فِى ٱلْءَافَاقِ
- in the horizons
- பல பகுதிகளிலும்
- wafī anfusihim
- وَفِىٓ أَنفُسِهِمْ
- and in themselves
- அவர்களிலும்
- ḥattā
- حَتَّىٰ
- until
- இறுதியாக
- yatabayyana
- يَتَبَيَّنَ
- becomes clear
- தெளிவாகிவிடும்
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- annahu
- أَنَّهُ
- that it
- நிச்சயமாக இதுதான்
- l-ḥaqu
- ٱلْحَقُّۗ
- (is) the truth
- உண்மை
- awalam yakfi
- أَوَلَمْ يَكْفِ
- Is (it) not sufficient
- போதாதா?
- birabbika
- بِرَبِّكَ
- concerning your Lord
- உமது இறைவனுக்கு
- annahu
- أَنَّهُۥ
- that He
- நிச்சயமாக தான்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) over all things
- எல்லாவற்றையும்
- shahīdun
- شَهِيدٌ
- a Witness?
- நன்கு பார்ப்பவனாக
Transliteration:
Sanureehim Aayaatinaa fil aafaaqi wa feee anfusihim hattaa yatabaiyana lahum annahul haqq; awa lam yakfi bi Rabbika annahoo 'alaa kulli shai-in Shaheed(QS. Fuṣṣilat:53)
English Sahih International:
We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness? (QS. Fussilat, Ayah ௫௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம்முடைய அத்தாட்சி களை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உங்கள் இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பது (உங்களுக்கு) போதாதா? (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௫௩)
Jan Trust Foundation
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக தான் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருகின்றான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும் இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?