Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௪௪

Qur'an Surah Fussilat Verse 44

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா [௪௧]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِيًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰيٰتُهٗ ۗ ءَاَ۬عْجَمِيٌّ وَّعَرَبِيٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِيْنَ اٰمَنُوْا هُدًى وَّشِفَاۤءٌ ۗوَالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ فِيْٓ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَيْهِمْ عَمًىۗ اُولٰۤىِٕكَ يُنَادَوْنَ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ ࣖ (فصلت : ٤١)

walaw jaʿalnāhu
وَلَوْ جَعَلْنَٰهُ
And if We (had) made it
நாம் இதை ஆக்கி இருந்தால்
qur'ānan
قُرْءَانًا
a Quran
குர்ஆனாக
aʿjamiyyan
أَعْجَمِيًّا
(in) a foreign (language)
அரபி அல்லாத மொழி
laqālū
لَّقَالُوا۟
they (would have) said
கூறியிருப்பார்கள்
lawlā fuṣṣilat
لَوْلَا فُصِّلَتْ
"Why not are explained in detail
விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா?
āyātuhu
ءَايَٰتُهُۥٓۖ
its verses?
இதன் வசனங்கள்
āʿ'jamiyyun
ءَا۬عْجَمِىٌّ
(Is it) a foreign (language)
அரபி அல்லாத ஒரு மொழியிலா!
waʿarabiyyun
وَعَرَبِىٌّۗ
and an Arab?"
இன்னும் அரபி ஆயிற்றே !
qul huwa
قُلْ هُوَ
Say "It (is)
கூறுவீராக!/இது
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
for those who believe
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
hudan
هُدًى
a guidance
நேர்வழி(யும்)
washifāon
وَشِفَآءٌۖ
and a healing"
நிவாரணமும்
wa-alladhīna lā yu'minūna
وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
And those who (do) not believe
எவர்கள்/நம்பிக்கை கொள்ளவில்லையோ
fī ādhānihim
فِىٓ ءَاذَانِهِمْ
in their ears
அவர்களின் காதுகளில்
waqrun
وَقْرٌ
(is) deafness
செவிட்டுத்தனம்
wahuwa
وَهُوَ
and it
அது
ʿalayhim
عَلَيْهِمْ
(is) for them
அவர்கள் மீது
ʿaman
عَمًىۚ
blindness
மறைந்திருக்கிறது
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
yunādawna
يُنَادَوْنَ
are being called
அழைக்கப்படுவார்கள்
min makānin
مِن مَّكَانٍۭ
from a place
இடத்தில் இருந்து
baʿīdin
بَعِيدٍ
far"
மிக தூரமான

Transliteration:

Wa law ja'alnaahu Qur-aanan A'jamiyyal laqaaloo law laa fussilat Aayaatuhoo 'a A'jamiyyunw wa 'Arabiyy; qul huwa lillazeena aamanoo hudanw wa shifaaa'unw wallazeena la yu'minoona feee aazaanihim waqrunw wa huwa 'alaihim 'amaa; ulaaa'ika yunaadawna mim maakaanim ba'eed (QS. Fuṣṣilat:44)

English Sahih International:

And if We had made it a foreign [i.e., non-Arabic] Quran, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe – in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place. (QS. Fussilat, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

இதனை அரபி அல்லாத மொழியில் நாம் இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நம்முடைய அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத மொழி; நாமோ அதனை அறியாத) அரபிகள் என்றும் கூறுவார்கள். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கின்றது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அவர்கள் (உங்கள் சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). (ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, வசனம் ௪௪)

Jan Trust Foundation

நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால்; இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது; இன்னும், அவர் (கண்)களில் குருட்டுத்தனமும் இருக்கிறது; எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால் இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியிலா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! இது (-இந்த குர்ஆன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியும் நிவாரணமும் ஆகும். எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிந்துகொள்ள முடியாது.) அவர்கள்(-இந்த வேதத்தை நிராகரிப்பவர்கள்) மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள். (தூரமான இடத்திலிருந்து அழைக்கப்படுபவரால் எவ்வாறு அழைப்பை சரியாக புரியமுடியாதோ அவ்வாறே இவர்களும் இந்த வேதத்தின் சத்தியத்தை புரிய மாட்டார்கள்.)