Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௮௨

Qur'an Surah Ghafir Verse 82

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௮௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ ۗ كَانُوْٓا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَمَآ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ (غافر : ٤٠)

afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
Do they not travel
அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
through the land
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
and see
அவர்கள் பார்த்திருப்பார்களே!
kayfa kāna
كَيْفَ كَانَ
how was
எப்படி இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
முடிவு
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
(of) those who (were) before them? (were) before them?
தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
kānū
كَانُوٓا۟
They were
இருந்தனர்
akthara
أَكْثَرَ
more numerous
அதிகமாக(வும்)
min'hum
مِنْهُمْ
than them
இவர்களை விட
wa-ashadda
وَأَشَدَّ
and mightier
மிக பலசாலிகளாகவும்
quwwatan
قُوَّةً
(in) strength
வலிமையால்
waāthāran
وَءَاثَارًا
and impressions
இன்னும் அடையாளங்களால்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
famā aghnā
فَمَآ أَغْنَىٰ
but not availed
ஆனால், தடுக்கவில்லை
ʿanhum
عَنْهُم
them
அவர்களை விட்டு
mā kānū yaksibūna
مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
what they used (to) earn
அவர்கள் செய்து கொண்டிருந்தது

Transliteration:

Afalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; kaanoo aksara minhum wa ashadda quwwatanw wa aasaaran fil ardi famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon (QS. Ghāfir:82)

English Sahih International:

Have they not traveled through the land and observed how was the end of those before them? They were more numerous than themselves and greater in strength and in impression on the land, but they were not availed by what they used to earn. (QS. Ghafir, Ayah ௮௨)

Abdul Hameed Baqavi:

(நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்க வில்லையா? அவ்வாறாயின், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். அவர்களோ, இவர்களைவிட மக்கள் தொகையில் அதிகமானவர் களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (ஸூரத்துல் முஃமின், வசனம் ௮௨)

Jan Trust Foundation

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.