Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௫

Qur'an Surah Ghafir Verse 5

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَّالْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ ۖوَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَأْخُذُوْهُ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ ۗفَكَيْفَ كَانَ عِقَابِ (غافر : ٤٠)

kadhabat
كَذَّبَتْ
Denied
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
before them
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
(the) people
மக்களும்
nūḥin
نُوحٍ
(of) Nuh
நூஹூடைய
wal-aḥzābu
وَٱلْأَحْزَابُ
and the factions
இராணுவங்களும்
min baʿdihim
مِنۢ بَعْدِهِمْۖ
after them after them
அவர்களுக்குப் பின்னர்
wahammat
وَهَمَّتْ
and plotted
இன்னும் நாடினார்கள்
kullu
كُلُّ
every
எல்லா
ummatin
أُمَّةٍۭ
nation
சமுதாயத்தினரும்
birasūlihim
بِرَسُولِهِمْ
against their Messenger
தங்களது தூதரை
liyakhudhūhu
لِيَأْخُذُوهُۖ
to seize him
அவரைதண்டிப்பதற்கு
wajādalū
وَجَٰدَلُوا۟
and they disputed
இன்னும் தர்க்கம் செய்தனர்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
by falsehood
அசத்தியத்தைக் கொண்டு
liyud'ḥiḍū
لِيُدْحِضُوا۟
to refute
அவர்கள் அழிப்பதற்காக
bihi
بِهِ
thereby
அதன் மூலம்
l-ḥaqa
ٱلْحَقَّ
the truth
சத்தியத்தை
fa-akhadhtuhum
فَأَخَذْتُهُمْۖ
So I seized them
ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன்
fakayfa
فَكَيْفَ
Then how
எப்படி?
kāna
كَانَ
was
இருந்தது
ʿiqābi
عِقَابِ
My penalty?
எனது தண்டனை

Transliteration:

Kazzabat qablahum qawmu Noohinw wal Ahzaabu mim ba'dihim wa hammat kullu ummatim bi Rasoolihim liyaa khuzoobhu wa jaadaloo bilbaatili liyudhidoo bihil haqqa fa akhaztuhum fakifa kaana 'iqaab (QS. Ghāfir:5)

English Sahih International:

The people of Noah denied before them and the [disbelieving] factions after them, and every nation intended [a plot] for their messenger to seize him, and they disputed by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth. So I seized them, and how [terrible] was My penalty. (QS. Ghafir, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் (குற்றம் கண்டு)பிடிக்கவே கருதினார்கள். அன்றி, சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எத்தகைய தண்டனை கிடைத்தது என்பதைக் கவனிப்பீராக! (ஸூரத்துல் முஃமின், வசனம் ௫)

Jan Trust Foundation

இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, சமூது, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய) இராணுவங்களும் பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு நாடினார்கள். அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். எனது தண்டனை எப்படி இருந்தது?