Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௨௮

Qur'an Surah Ghafir Verse 28

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗٓ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّيَ اللّٰهُ وَقَدْ جَاۤءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ۗوَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ۚوَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِيْ يَعِدُكُمْ ۗاِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ (غافر : ٤٠)

waqāla
وَقَالَ
And said
கூறினார்
rajulun
رَجُلٌ
a man
ஓர் ஆடவர்
mu'minun
مُّؤْمِنٌ
believing
நம்பிக்கைகொண்டவர்
min āli
مِّنْ ءَالِ
from (the) family
குடும்பத்தாரில்
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னுடைய
yaktumu
يَكْتُمُ
who conceal(ed)
மறைத்தவராக
īmānahu
إِيمَٰنَهُۥٓ
his faith
தனது நம்பிக்கையை
ataqtulūna
أَتَقْتُلُونَ
"Will you kill
நீங்கள்கொல்கின்றீர்களா?
rajulan
رَجُلًا
a man
ஒரு மனிதரை
an yaqūla
أَن يَقُولَ
because he says
கூறியதற்காக
rabbiya
رَبِّىَ
"My Lord
என் இறைவன் என்று
l-lahu
ٱللَّهُ
(is) Allah"
அல்லாஹ்தான்
waqad
وَقَدْ
and indeed
திட்டமாக
jāakum
جَآءَكُم
he has brought you
அவர் கொண்டு வந்திருக்கிறார் உங்களுக்கு
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
clear proofs
தெளிவான அத்தாட்சிகளை
min rabbikum
مِن رَّبِّكُمْۖ
from your Lord?
உங்கள் இறைவனிடமிருந்து
wa-in yaku
وَإِن يَكُ
And if he is
அவர் இருந்தால்
kādhiban
كَٰذِبًا
a liar
பொய்யராக
faʿalayhi
فَعَلَيْهِ
then upon him
அவருக்குத்தான் கேடாக அமையும்
kadhibuhu
كَذِبُهُۥۖ
(is) his lie;
அவருடைய பொய்
wa-in yaku
وَإِن يَكُ
and if he is
அவர் இருந்தால்
ṣādiqan
صَادِقًا
truthful
உண்மையாளராக
yuṣib'kum
يُصِبْكُم
(there) will strike you
உங்களைவந்தடையும்
baʿḍu
بَعْضُ
some (of)
சில
alladhī
ٱلَّذِى
(that) which
அவர் எச்சரிப்பதில்
yaʿidukum
يَعِدُكُمْۖ
he threatens you
அவர் எச்சரிப்பதில் உங்களை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī man huwa
لَا يَهْدِى مَنْ هُوَ
(does) not guide (one) who [he]
நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர்
mus'rifun
مُسْرِفٌ
(is) a transgressor
வரம்புமீறுபவராக(வும்)
kadhābun
كَذَّابٌ
a liar
பெரும் பொய்யராக(வும்)

Transliteration:

Wa qaala rajulum mu'minummin Aali Fir'awna yaktumu eemaanahooo ataqtuloona rajulan ai yaqoola Rabbi yal laahu wa qad jaaa'akum bil haiyinaati mir Rabbikum wa iny yaku kaaziban fa'alaihi kazi buhoo wa iny yaku saadiqany yasibkum ba'dul lazee ya'idukum innal laaha laa yahdee man huwa musrifun kaazaab (QS. Ghāfir:28)

English Sahih International:

And a believing man from the family of Pharaoh who concealed his faith said, "Do you kill a man [merely] because he says, 'My Lord is Allah' while he has brought you clear proofs from your Lord? And if he should be lying, then upon him is [the consequence of] his lie; but if he should be truthful, there will strike you some of what he promises you. Indeed, Allah does not guide one who is a transgressor and a liar. (QS. Ghafir, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கை கொண்டு இருந்தார். அவர் தன்னுடைய நம்பிக்கையை மறைத்துக் கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) "அல்லாஹ்தான் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ, அவர் பயமுறுத்தும் வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்" என்றார். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௨௮)

Jan Trust Foundation

ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்| “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக நீங்கள் கொல்கின்றீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிப்பதில் சில உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் வரம்பு மீறுபவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கின்றாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.