Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௩

Qur'an Surah Ghafir Verse 13

ஸூரத்துல் முஃமின் [௪௦]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُوَ الَّذِيْ يُرِيْكُمْ اٰيٰتِهٖ وَيُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَاۤءِ رِزْقًا ۗوَمَا يَتَذَكَّرُ اِلَّا مَنْ يُّنِيْبُ (غافر : ٤٠)

huwa alladhī
هُوَ ٱلَّذِى
He (is) the One Who
அவன்தான்
yurīkum
يُرِيكُمْ
shows you
உங்களுக்கு காண்பிக்கின்றான்
āyātihi
ءَايَٰتِهِۦ
His Signs
தனது அத்தாட்சிகளை
wayunazzilu
وَيُنَزِّلُ
and sends down
இறக்குகின்றான்
lakum
لَكُم
for you
உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
riz'qan
رِزْقًاۚ
provision
உணவை
wamā yatadhakkaru
وَمَا يَتَذَكَّرُ
But (does) not take heed
நல்லுபதேசம் பெற மாட்டார்கள்
illā man yunību
إِلَّا مَن يُنِيبُ
except (one) who turns
திரும்புகின்றவர்களைத் தவிர

Transliteration:

Huwal lazee yureekum Aayaatihee wa yunazzilu lakum minas samaaa'i rizqaa; wa maa tatazakkaru illaa mai yuneeb (QS. Ghāfir:13)

English Sahih International:

It is He who shows you His signs and sends down to you from the sky, provision. But none will remember except he who turns back [in repentance]. (QS. Ghafir, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

அவன் தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கி வைக்கின்றான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள். (ஸூரத்துல் முஃமின், வசனம் ௧௩)

Jan Trust Foundation

அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கின்றான். வானத்தில் இருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரமான மழையை) இறக்குகின்றான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களைத் தவிர (மற்றவர்கள்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.