Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௩

Qur'an Surah Az-Zumar Verse 73

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௭௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَنَّةِ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ (الزمر : ٣٩)

wasīqa
وَسِيقَ
And (will) be driven
கொண்டு வரப்படுவார்(கள்)
alladhīna ittaqaw
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
those who feared
அஞ்சியவர்களை
rabbahum
رَبَّهُمْ
their Lord
தங்கள் இறைவனை
ilā l-janati
إِلَى ٱلْجَنَّةِ
to Paradise
சொர்க்கத்திற்கு
zumaran
زُمَرًاۖ
(in) groups
கூட்டம் கூட்டமாக
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā jāūhā
إِذَا جَآءُوهَا
when they reach it
அதற்கருகில் அவர்கள் வரும்போது
wafutiḥat
وَفُتِحَتْ
and (will) be opened
இன்னும் திறக்கப்படும்
abwābuhā
أَبْوَٰبُهَا
its gates
அதன் வாசல்கள்
waqāla
وَقَالَ
and (will) say
கூறுவார்கள்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
khazanatuhā
خَزَنَتُهَا
its keepers
அதன் காவலாளிகள்
salāmun
سَلَٰمٌ
"Peace be
ஈடேற்றம் உண்டாகட்டும்
ʿalaykum
عَلَيْكُمْ
upon you
உங்களுக்கு
ṭib'tum
طِبْتُمْ
you have done well
நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்
fa-ud'khulūhā
فَٱدْخُلُوهَا
so enter it
ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!
khālidīna
خَٰلِدِينَ
(to) abide eternally"
நிரந்தரமானவர்களாக

Transliteration:

Wa seeqal lazeenat taqaw Rabbahum ilal Jannati zumaran hattaaa izaa jaaa'oohaa wa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaa salaamun 'alaikum tibtum fadkhuloohaa khaalideen (QS. az-Zumar:73)

English Sahih International:

But those who feared their Lord will be driven to Paradise in groups until, when they reach it while its gates have been opened and its keepers say, "Peace be upon you; you have become pure; so enter it to abide eternally therein," [they will enter]. (QS. Az-Zumar, Ayah ௭௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள், (அந்நாளில் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும், உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கி விடுங்கள்" என்று கூறுவார்கள். (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௭௩)

Jan Trust Foundation

எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி| “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தங்கள் இறைவனை அஞ்சியவர்களை கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் நிரந்தரமானவர்களாக நுழைந்து விடுங்கள்!