Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௭௧

Qur'an Surah Az-Zumar Verse 71

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسِيْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى جَهَنَّمَ زُمَرًا ۗحَتّٰىٓ اِذَا جَاۤءُوْهَا فُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنْكُمْ يَتْلُوْنَ عَلَيْكُمْ اٰيٰتِ رَبِّكُمْ وَيُنْذِرُوْنَكُمْ لِقَاۤءَ يَوْمِكُمْ هٰذَا ۗقَالُوْا بَلٰى وَلٰكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكٰفِرِيْنَ (الزمر : ٣٩)

wasīqa
وَسِيقَ
And (will) be driven
ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
ilā jahannama
إِلَىٰ جَهَنَّمَ
to Hell
நரகத்தின் பக்கம்
zumaran
زُمَرًاۖ
(in) groups
கூட்டம் கூட்டமாக
ḥattā
حَتَّىٰٓ
until
இறுதியாக
idhā jāūhā
إِذَا جَآءُوهَا
when they reach it
அதற்கு அவர்கள் வந்தவுடன்
futiḥat
فُتِحَتْ
(will) be opened
திறக்கப்படும்
abwābuhā
أَبْوَٰبُهَا
its gates
அதன் வாசல்கள்
waqāla
وَقَالَ
and (will) say
இன்னும் கூறுவார்கள்
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
khazanatuhā
خَزَنَتُهَآ
its keepers
அதன் காவலாளிகள்
alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
"Did not come to you
உங்களுக்கு வரவில்லையா?
rusulun
رُسُلٌ
Messengers
தூதர்கள்
minkum
مِّنكُمْ
from you
உங்களில் இருந்தே
yatlūna
يَتْلُونَ
reciting
ஓதிக் காட்டினார்களே
ʿalaykum
عَلَيْكُمْ
to you
உங்களுக்கு
āyāti
ءَايَٰتِ
(the) Verses
வசனங்களை
rabbikum
رَبِّكُمْ
(of) your Lord
உங்கள் இறைவனின்
wayundhirūnakum
وَيُنذِرُونَكُمْ
and warning you
இன்னும் உங்களை எச்சரித்தார்களே
liqāa yawmikum hādhā
لِقَآءَ يَوْمِكُمْ هَٰذَاۚ
(of the) meeting (of) your Day this?"
நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி
qālū
قَالُوا۟
They (will) say
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
"Nay!"
ஏன் வரவில்லை
walākin
وَلَٰكِنْ
But
எனினும்
ḥaqqat
حَقَّتْ
has been justified
உறுதியாகி விட்டது
kalimatu
كَلِمَةُ
(the) word
வாக்கு
l-ʿadhābi
ٱلْعَذَابِ
(of) punishment
வேதனையின்
ʿalā l-kāfirīna
عَلَى ٱلْكَٰفِرِينَ
against the disbelievers
நிராகரிப்பவர்கள் மீது

Transliteration:

Wa seeqal lazeena kafaroon ilaa jahannama zumaran battaaa izaa jaaa'oohaa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaaa alam yaatikum Rusulum minkum yatloona 'alaikum Aayaati Rabbikum wa yunziroonakum liqaaa'a Yawmikum haazaa; qaaloo balaa wa laakin haqqat kalimatul 'azaabi 'alal kaafireen (QS. az-Zumar:71)

English Sahih International:

And those who disbelieved will be driven to Hell in groups until, when they reach it, its gates are opened and its keepers will say, "Did there not come to you messengers from yourselves, reciting to you the verses of your Lord and warning you of the meeting of this Day of yours?" They will say, "Yes, but the word [i.e., decree] of punishment has come into effect upon the disbelievers." (QS. Az-Zumar, Ayah ௭௧)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (வந்தார்கள்)" என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௭௧)

Jan Trust Foundation

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள்; அவர்கள் அங்கே வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி| “உங்களிலிருந்து (அல்லாஹ்வின்) தூதர்கள், உங்கள் இறைவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறவர்களாகவும், இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டுமென்பதைப் பற்றி உங்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்; (இதற்கு அவர்கள்) “ஆம் (வந்தார்கள்)” என்று கூறுவார்கள்; எனினும் காஃபிர்களுக்கு வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கு (-அந்த நரகத்திற்கு அருகில்) வந்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களுக்குக் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டது.”