Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௪௯

Qur'an Surah Az-Zumar Verse 49

ஸூரத்துஜ்ஜுமர் [௩௯]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِذَا مَسَّ الْاِنْسَانَ ضُرٌّ دَعَانَاۖ ثُمَّ اِذَا خَوَّلْنٰهُ نِعْمَةً مِّنَّاۙ قَالَ اِنَّمَآ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ ۗبَلْ هِيَ فِتْنَةٌ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ (الزمر : ٣٩)

fa-idhā massa
فَإِذَا مَسَّ
So when touches
ஏற்பட்டால்
l-insāna
ٱلْإِنسَٰنَ
[the] man
மனிதனுக்கு
ḍurrun
ضُرٌّ
adversity
ஒரு தீங்கு
daʿānā
دَعَانَا
he calls upon Us;
நம்மிடம் பிரார்த்திக்கின்றான்
thumma idhā khawwalnāhu
ثُمَّ إِذَا خَوَّلْنَٰهُ
then when We bestow (on) him
பிறகு நாம் அவனுக்கு வழங்கினால்
niʿ'matan
نِعْمَةً
a favor
ஓர்அருட்கொடையை
minnā
مِّنَّا
from Us
நம்மிடமிருந்து
qāla
قَالَ
he says
அவன் கூறுகிறான்
innamā ūtītuhu
إِنَّمَآ أُوتِيتُهُۥ
"Only I have been given it
இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍۭۚ
for knowledge"
அறிந்ததினால்தான்
bal hiya
بَلْ هِىَ
Nay it
மாறாக, அது
fit'natun
فِتْنَةٌ
(is) a trial
ஒரு சோதனையாகும்
walākinna aktharahum lā yaʿlamūna
وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
but most of them (do) not know
என்றாலும்/அவர்களில் அதிகமானவர்கள்/அறியமாட்டார்கள்

Transliteration:

Fa izaa massal insaana durrun da'aanaa summa izaa khawwalnaahu ni'matam minna qaala innamaaa ootee tuhoo 'alaa 'ilm; bal hiya fitna tunw wa laakinna aksarahum laa ya'lamoon (QS. az-Zumar:49)

English Sahih International:

And when adversity touches man, he calls upon Us; then when We bestow on him a favor from Us, he says, "I have only been given it because of [my] knowledge." Rather, it is a trial, but most of them do not know. (QS. Az-Zumar, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, "தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்" என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை. (ஸூரத்துஜ்ஜுமர், வசனம் ௪௯)

Jan Trust Foundation

மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்| “இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!” என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “ இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (என்னை அதற்கு தகுதி உள்ளவனாக அல்லாஹ்) அறிந்ததினால்தான். மாறாக, அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு இறைவன் ஏன் இந்த செல்வத்தைக் கொடுத்தான் என்று) அறியமாட்டார்கள்.